search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PD Warrant"

    • குமாரபாளையம் நீதிமன்ற வழக்கு விசார ணைக்கு ஆஜராகாத டி.எஸ்.பி. க்கு குமாரபாளையம் நீதிமன்ற நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார்.
    • 2006ம் ஆண்டு பதியப்பட்ட 2 வழக்கில் சாட்சியம் அளிக்க, குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்றம் சார்பில் பல முறை சம்மன்கள் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நீதிமன்ற வழக்கு விசார ணைக்கு ஆஜராகாத டி.எஸ்.பி. க்கு குமாரபாளையம் நீதிமன்ற நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார்.

    திருநெல்வேலியில் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வருபவர் சுரேஷ்குமார். இவர் குமாரபாளையம் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சமயத்தில், 2006ம் ஆண்டு பதியப்பட்ட 2 வழக்கில் சாட்சியம் அளிக்க, குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்றம் சார்பில் பல முறை சம்மன்கள் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. விசார ணைக்கு ஆஜராகாததால், நீதிபதி மாலதி , டி.எஸ்.பி. சுரேஷ்குமாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்திரவிட்டார்.

    ×