search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pazhangarai Panchayat"

    • அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சியின் மாதாந்திர கூட்டம் தலைவர் கோமதி தலைமையில் நடந்தது.
    • குளத்துப்பாளையம் பகுதியில் நீர்வழிப்பாதையை தனி நபர் ஆக்கிரமித்துள்ளார்.

    அவினாசி :

    அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சியின் மாதாந்திர கூட்டம் தலைவர் கோமதி தலைமையில் நடந்தது.துணைத்தலைவர் மிலிட்டிரி நடராசன் முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர்கள் சண்முகம், கவுரீஸ்வரி, அண்ணாமலை, சரஸ்வதி, தங்கபாண்டியன் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் குளத்துப்பாளையம் பகுதியில் நீர்வழிப்பாதையை தனி நபர் ஆக்கிரமித்துள்ளார். ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்த்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவினாசிலிங்கம்பாளையம் பிரிவு முதல் ஊர் வரை உள்ள சாலை மிகவும் பழுதடைந்து போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளதால் அந்த சாலையை பராமரிப்பது. மகாலட்சுமி அவென்யூ பகுதியில் தெருவிளக்கு அமைப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×