என் மலர்
நீங்கள் தேடியது "Pathetic"
- இவர் கடந்த சிலநாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார்.
- இது பற்றி விழுப்புரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் விசாரிக்கிறார்.
விழுப்புரம்:
விழுப்புரம் சாலாமேடு காமராஜர் நகர் ஜீவா தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. (வயது 57). உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். இவர் கடந்த சிலநாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார்.
எனவே விடுமுறையில் இருந்த அவர் சிகிச்சை எடுத்தும் உடல் நலம் சீராகவில்லை. தொடர்ந்து அவதிப்பட்டு வந்த கிருஷ்ணமூர்த்தி இன்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்தார். இதுபற்றி விழுப்புரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் விசாரிக்கிறார்.






