என் மலர்
நீங்கள் தேடியது "Pasumbon Pandian Attack"
- எடப்பாடி பழனிசாமி பா.ஜனதா கட்சியின் கைப்பாவை ஆகிவிட்டார்.
- அ.ம.மு.க. பொது செயலாளர் பசும்பொன் பாண்டியன் கூறியுள்ளார்.
மதுரை
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா கட்டி காத்த அ.தி.மு.க. இயக்கத்தை இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி தனதாக்கிக் கொள்ள நினைக்கிறார்.
இதற்காக மத்திய பாரதிய ஜனதா அரசின் கை பாவையாக மாறிவிட்ட அவர் அ.தி.மு.க.வின் சட்ட விதிகளை மதிக்காமல் தன்னை பொதுச் செயலாளராக பிரகடனம் செய்து வருகிறார்.
அ.தி.மு.க. தொடங்கப்பட்ட போது எம்.ஜி.ஆர். பொதுக்குழுவுக்கு எந்த ஒரு அதிகாரத்தையும் வழங்கவில்லை. தி.மு.க.வில் இருந்து பொதுக்குழுவை கூட்டி எம்.ஜி.ஆர். நீக்கப் பட்டதன் காரணத்தினாலேயே பொதுக்குழு அதிகாரம் இல்லாத இயக்கமாக அ.தி.மு.க சட்ட விதிகள் தெளிவாக உள்ளது.
ஆனால் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டதாக நாடகம் ஆடி வருகிறார். தென் மாவட்ட மக்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமியை ஒருபோதும் தென் மாவட்ட மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மத்திய பாரதிய ஜனதா தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வை கபளிகரம் செய்ய முயற்சிக் கிறது. அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உள்ளது.
இதனை பயன் படுத்தி உடனடியாக அவரது எம்.பி. பதவியும் மத்திய பா. ஜனதா அரசு பறித்துள்ளது. இது நீதிமன்ற நடவடிக்கை களை மத்திய அரசு எந்த அளவுக்கு அவமரியாதை யாக நடத்தி வருகிறது என்பதற்கு சிறந்த உதாரணமாகும்.
இதனை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா அரசை வீட்டுக்கு அனுப்ப ஒட்டு மொத்த இந்தியாவே தயாராகிவிட்டது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






