என் மலர்
நீங்கள் தேடியது "Passing students"
- 480 மதிப்பெண்களுக்கு மேல் 9 மாணவர்கள் எடுத்துள்ளனர்.
- முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி களில் 2022 - ம் ஆண்டு பிளஸ் -2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது . மாணவி எஸ்.யுவபிரியா 594 மதிப்பெண்கள், பி.ரன்ஜினி 588 மதிப்பெண்கள், எ.ஹரிபிரியா 584 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில்முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.
மேலும் 590 மதிப்பெண்களுக்கு மேல் 1 மாணவரும் , 580 மதிப்பெண்களுக்கு மேல் 6 மாணவர்களும், 500 மதிப்பெண் களுக்கு மேல் 58 மாணவர்களும் பெற்று சாதனை படைத் துள்ளனர். அதேபோல 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவி எஸ். நித்யஸ்ரீ பாலா 488 மதிப்பெண்கள், ஜி.யுவ ஸ்ரீ 487 மதிப்பெண் கள், பி.புவனேஷ்வரி , டி.முகமது ஆசிக் ஆகியோர் 486 மதிப் பெண்கள் பெற்று பள்ளியில் முதல் 3 இடங்களை பெற்று. சாதனை படைத்துள்ளனர்.
480 மதிப்பெண்களுக்கு மேல் 9 மாணவர்களும் , 470 மதிப் பெண்களுக்கு மேல் 17 மாணவர்களும், 450 மதிப்பெண்க ளுக்கு மேல் 27 மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 70 மாணவர்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், இதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும், பள்ளியின் பொறுப்பு ஆசிரியர் கணேஷ்குமார் ஆகியோரை பள்ளி செயலாளர் டாக்டர் வி.எம்.நேரு, தலைவர் டாக்டர் எஸ்.கணேசன், பொருளாளர் எ.மணி , இணைச் செயலாளர் எஸ்.இரவிச்சந்திரன், பள்ளி முதல்வர் டாக்டர் என்.மகாதேவன் மற்றும் அறக்கட்டளை இயக்குனர்கள் பாராட்டினார்கள்.






