என் மலர்
நீங்கள் தேடியது "Passengers were shocked"
- ரூ10-ல் இருந்து ரூ.20-ஆக அதிகரித்தது
- தெற்கு ெரயில்வே அறிவிப்பு
வேலூர்:
அரக்கோணம், காட்பாடி ரெயில் நிலையத்தில் பிளாட்பார கட்டணம் நேற்று முதல் உயர்த்தப்பட்டது.
தமிழகத்தில் காட்பாடி, சென்னை, சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர் ஆவடி ஆகிய ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் கட்டணம் ரூ10-ல் இருந்து ரூ.20-ஆக உயர்த்துவதாக தெற்கு ெரயில்வே அறிவித்தது.
இந்த கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. திடீரென கட்டண உயர்வு அதிகரித்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அரக்கோணம், காட்பாடி ரெயில் நிலையத்திற்கு உறவினர்களை வழியனுப்ப வந்தவர்கள் கட்டண உயர்வு காரணமாக அதிருப்தி அடைந்தனர்.






