search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pasarai"

    • பாசறைக் கூட்டம் வருகிற 26-ந் தேதி (புதன்கிழமை) திருச்சியில் நடைபெற உள்ளது
    • இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கிழக்கு மாவட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள் கூட்டம் வேளாண்மை துறை அமைச்சரும் கடலூர் கிழக்கு மாவட்ட செய லாளருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலை மையில் வடலூரில் நடை பெற்றது. கூட்டத்தில் கடலூர் மாநகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சிப்பாடி பாலமுருகன், ஒன்றிய செயலாளர்கள் தங்க.ஆனந்தன், காசிராஜன், நாராயண சாமி, சுப்ரமணி யன், தனஞ்செயன், விஜய சுந்தரம், பகுதி செய லாளர்கள் நடராஜன், வெங்கடேஷ், சலீம், இளைய ராஜா, நகர செய லாளர் செந்தில்குமார், தமிழ்ச்செல்வன், நகராட்சித் தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர் சுப்புராயலு, பேரூராட்சித் தலைவர் குறிஞ்சிப்பாடி கோகிலா குமார், துணைத்தலைவர் ராமர் ஆகியோர் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டா லின் தலைமைமையில் நடை பெறும் டெல்டா மண்டலத்திற்குட்பட்ட வாக்குச்சாவடி நிலைக்குழு முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் வருகிற 26-ந் தேதி (புதன்கிழமை) திருச்சியில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கடலூர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 5 சட்டமன்ற தொகு திகளின் வாக்குச்சாவடி நிலைக்குழு முகவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு கிளைக் கழக செயலாளர்கள் கலந்துக் கொள்ள உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

    வருகிற 1.1.2024 தகுதி யேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தினை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித் துள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், 2023-ம் ஆண்டு சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்திடும் பணி வாக்குச்சாவடி நிலை அலுவலரால் வீட்டுக்கு வீடு சரிபார்ப்பு பணிகள் 21.07.2023 வெள்ளி முதல் 21.08.2023 திங்கள் வரை நடைபெறவுள்ளது. மேற்கண்ட நாட்களில் நடைபெறும் வாக்காளர் சேர்ப்பு பணியில் மற்றும் சிறப்பு முகாம்களில் நமது மாவட்டத்தில் உள்ள மாவட்ட கழக நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் வாக்குச் சாவடி நிலை முகவர்கள் முன்னாள், இந்நாள், சட்டமன்ற, நாடாளுமன்ற பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இதனை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×