என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "opportunity in vocational training"

    • முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கான வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு, கணினி தட்டச்சுபயிற்சி மற்றும் வன்பொருள் பழுது பார்த்தல் போன்ற பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கான வேலைவாய்ப்பினை ஊக்குவித்திடும் விதமாக தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகம் மூலம் கீழ்க்காணும் தொழிற்பயிற்சிகள் வழங்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில் கைபேசி பழுது நீக்குதல், கார் மெக்கானிக், குளிர்சாதனப்பெட்டி, பராமரிப்பு, எலக்ட்ரீசியன், பிலம்பிங், ஓட்டுநர் பயிற்சி, மின்சாரத்தால் இயங்கும் சீருந்துகள் பராமரித்தல் மற்றும் அதற்கான மின்சாரபேட்டரி பராமரித்தல் மற்றும் பழுதுபார்த்தல், மின்சாரத்தால் இயங்கும் இருசக்கர வாகனங்கள் பழுதுபார்த்தல், பராமரித்தல் மற்றும் பேட்டரிசார்ஜ் செய்வதற்கான நிலையம் அமைத்து பராமரித்தல்,

    தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு, கணினி தட்டச்சுபயிற்சி மற்றும் வன்பொருள் பழுது பார்த்தல் போன்ற பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் கடலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவிஇயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    ×