என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Operator sudden death"

    • ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    வேலூர் மாவட்டம் மேல்பாடி அருகே உள்ள அப்துல்லாபு ரம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 28), பொக்லைன் ஆபரேட்டர். இவர், நெல்லிக்குப்பம் அருகே பணியில் இருந்த போது லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக லாலாபேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அனுப்பி வைக்கப்பட்டார்.

    பின்னர் அவர் லாலாபேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த போது திடீரென மயக்கம் அடைந்துள்ளார். உடனே அவர் சிகிச் சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக் டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரி வித்தனர்.

    இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×