என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Opening of the library"

    • ரூ.3.78 லட்சம் மதிப்பில் பழுதுபார்த்தல் பணி நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நெல்வாய் ஊராட்சி - சின்ன தென்னல் கிராமத்தில் 2019-2020ஆம் நிதியாண்டின், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் மற்றும், நெல்வாய் ஊராட்சி - எஸ்.கொளத்தூர் கிராமத்தில் 2021-2022ஆம் நிதியாண்டின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், ரூ.3,78 லட்சம் மதிப்பீட்டில் பழுதுபார்த்தல் பணி மேற்கொள்ளப்பட்ட நூலக கட்டிடத்தினையும், நெமிலி ஒன்றிய குழுதலைவர் பெ.வடிவேலு திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் வேதமுத்து, நெல்வாய் ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகம்மாள் சுப்பிரமணி, ஒன்றிய குழு உறுப்பினர் சங்கீதா கதிரவன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தனலட்சுமி தனசேகர், ஊராட்சி செயலாளர் செந்தில்குமார், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி பணியாளர்கள், கிராம பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

    ×