search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Online penalty"

    • ஆட்டோ தொழிலாளர்களுக்கான நலவாரிய உதவியை உயர்த்தி வழங்க வேண்டும்.
    • ஆட்டோ தொழிலாளர்களுக்கான நலவாரிய உதவியை உயர்த்தி வழங்க வேண்டும்.

    திருப்பூர் :

    இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி மாநில பொதுக்குழு கூட்டம் திருப்பூர் ஆயிரம் வைசியர் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், பொதுக்குழுவை துவக்கி வைத்தார்.

    கூட்டத்தில் ஆட்டோ தொழிலாளர் நலவாரிய பதிவு, ஆன்லைன் மூலம் நடக்கிறது.குளறுபடிகளை களைந்து ஆன்லைன் பதிவை எளிதாக்க வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கான நலவாரிய உதவியை உயர்த்தி வழங்க வேண்டும். விபத்து காப்பீடை ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.

    போக்குவரத்து துறை சேவைகளை குறிப்பிட்ட நிறுவனங்கள் மூலம் மட்டுமே பெற முடிகிறது. ஏஜன்சிகள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன.கட்டணங்களை 50 சதவீதம் குறைத்து போக்குவரத்து அலுவலக சேவைகள் எளிதாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். ஆட்டோக்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கின்றனர். பயணிகளை இறக்கிவிடும் நேரத்தில் காரணம் எதுவுமே இல்லாமல் அபராதம் விதிக்கின்றனர்.

    விதிமீறும் ஆட்டோக்களின் ஆவணத்தை சரிபார்த்து டிரைவர் கையொப்பத்துடன், டிரைவிங் லைசென்ஸ் எண், பெயர் விவரங்களை ரசீதில் குறிப்பிட வேண்டும். ஆன்லைன் அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×