என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Omshaktisekhar"
- அ.தி.மு.க.வின் உண்மையான விசு வாசிகள் ஜெயலலிதாவை மட்டுமே கட்சி நிரந்தர பொதுச் செயலாளர் என்று இன்றளவும் கூறி வருகின்றனர்.
- ஒரு சுயநல கூட்டத்திற்கு ஜெயலலிதா ஆன்மா கொடுத்த சம்பட்டி அடி இந்த தடையாகும்.
புதுச்சேரி:
முன்னாள் எம்.எல்.ஏ. ஒம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
குறுக்கு வழியில் அடைய நினைக்கும் எந்த ஒரு பொருளும் பதவியும் நிலைக்காது என்பதற்கு உதாரணமாக அ.தி.மு.க. பொதுசெயலாளர் பதவிக்கான தேர்தலுக்கு நீதிமன்றம் அளித்த தடை அமைந்துள்ளது. அ.தி.மு.க.வின் உண்மையான விசு வாசிகள் ஜெயலலிதாவை மட்டுமே கட்சி நிரந்தர பொதுச் செயலாளர் என்று இன்றளவும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் அந்தப் பதவியை குறுக்கு வழியில் தனது சுயநலத்திற்காக கபலிகரம் செய்ய முயற்சித்த ஒரு சுயநல கூட்டத்திற்கு ஜெயலலிதா ஆன்மா கொடுத்த சம்பட்டி அடி இந்த தடையாகும்.
ஜெயலலிதா தனது உண்மையான விசுவாசியாக சுட்டிக்காட்டிய கட்சி ஒருங்கிணைப்பாளர், கட்சி பொருளாளர் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பி.எஸ். கரத்தை என்றும் வலுப்படுத்த புதுவை மாநிலக் கழகமும் தொண்டர்களும் துணை நிற்போம் என உறுதி அளித்து இந்த நீதிமன்ற தடையை வரவேற்று மகிழ்கிறோம்.
இவ்வாறு ஒம்சக்தி சேகர் அறிக்கையில் கூறியுள்ளார்.
- ஒட்டுமொத்த இந்தியாவும், உலகமும் எதிர் நோக்கி இருந்த பட்ஜெட்டை சிறப்பாக நிதி மந்திரி தாக்கல் செய்துள்ளார். மாநில அரசுக்கு வழங்கும் வட்டியில்லா கடன் இன்னும் ஒரு வருடத்துக்கு நீடிக்கப்படும்.
- சுற்றுலாத்துறை உருவாக்க தனி செயலி, அஞ் சலகத்தில் முதியோருக்கு வைப்பு நிதி வரம்பு 15 லட்சத்திலிருந்து 30 லட்சமாக உயர்த்தியது.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்திசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது:-
சிறப்பான பட்ஜெட்
ஒட்டுமொத்த இந்தியாவும், உலகமும் எதிர் நோக்கி இருந்த பட்ஜெட்டை சிறப்பாக நிதி மந்திரி தாக்கல் செய்துள்ளார். மாநில அரசுக்கு வழங்கும் வட்டியில்லா கடன் இன்னும் ஒரு வருடத்துக்கு நீடிக்கப்படும்.
ரெயில்வே துறைக்கு 2 லட்சம் கோடி, டிவி,செல்போன் உதிரி பாகங்கள் இறக்குமதி வரி குறைப்பு, மாசு ஏற்படுத்தும் வாகனங்கள் அகற்றும் திட்டத்திற்கு கூடுதல் நிதி, 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி, அனைத்து மாநில பொருட்களும் கிடைக்கும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு வணிக வளாகம் அமைக்கப் படும். 7.5 சதவீத வட்டியில் பெண்களுக்கு புதிய சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
சுற்றுலாத்துறை உருவாக்க தனி செயலி, அஞ் சலகத்தில் முதியோருக்கு வைப்பு நிதி வரம்பு 15 லட்சத்திலிருந்து 30 லட்சமாக உயர்த்தியது. ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை அளவு 4.5 லட்சத்திலிருந்து 9 லட்சம் ஆக உயர்த்தியது, நகர்ப்புற கட்டமைப்பு வளர்ச்சிக்கு 10 ஆயிரம் கோடி, 2020 ஆம் ஆண்டு வாகன புகை இயக்கத்தை பூஜ்ஜியமாக நடவடிக்கை.
நாடு முழுவதும் புதிய நர்சிங் கல்லூரிகள், தோட்டக்கலை வளர்ச்சி, புதுவை மாநிலத்திற்கு ஜி.எஸ்.டி. நிதி ஒதுக்கீடு,போன்ற பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.
வரலாற்று சிறப்பு மிக்க அனைத்து தரப்பு மக்கள் வளர்ச்சி யை உள்ளடக்கிய பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் மிக சிறப்பான பட்ஜெட்.
இவ்வாறு அவர் குறிப் பிட்டுள்ளார்.
- தமிழக அமைச்சரவையில் இருக்கும் 25 சதவீத அமைச்சர்கள் ஜெயலலிதாவால் பதவி சுகம் அனுபவித்த பின் அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்து சென்றவர்கள். அதில் ஒருவர்தான் அமைச்சர் ராமச்சந்திரன்.
- மறைந்த தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி, தற்போதைய முதல்- அமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் ெஜயலலிதாவை மரியாதையாக அம்மையார் என்றே அழைப்பார்கள்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
தமிழக அமைச்சரவையில் இருக்கும் 25 சதவீத அமைச்சர்கள் ஜெயலலிதாவால் பதவி சுகம் அனுபவித்த பின் அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்து சென்றவர்கள். அதில் ஒருவர்தான் அமைச்சர் ராமச்சந்திரன். முதலில் அமைச்சர் ராமச்சந்திரன் தனது பேச்சை திரும்ப பெற வேண்டும்.
தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செய்து மக்கள் இதயத்தில் இன்றளவும் வாழ்ந்து வரும் ஜெயலலிதா பற்றி யார் தரம் தாழ்ந்து பேசினாலும் எதிர் வரும் தேர்தலில் மக்கள் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். தமிழக அமைச்சர்கள் தாங்கள் துறை சார்ந்த பணிகளை பாராமல் தங்கள் தலைமையை குளிர்விக்க பல்வேறு விஷயங்களை சர்ச்சையாக பேசி வருவது தமிழக மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி, தற்போதைய முதல்- அமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் ெஜயலலிதாவை மரியாதையாக அம்மையார் என்றே அழைப்பார்கள். ஜெயலலிதாவால் அரசியலில் அடையாளம் காட்டப்பட சிலர் ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசுவது ஏற்று கொள்ளதக்கதல்ல. எனவே அமைச்சர் ராமச்சந்திரன் உடனடியாக தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும்.
தனது அமைச்சர்களுக்கு தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் வாய்ப்பூட்டு போட வேண்டும். இல்லாவிட்டால் புதுவைக்கு தமிழக அமைச்சர்கள் வரும்போது கருப்புக்கொடி காட்டுவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- மக்கள் அன்றாடம் பயன் பெறக்கூடிய துறைகளில் உள்ளாட்சி துறை முக்கியமான ஒன்று. வீட்டு வரி, பிறப்பு, இறப்பு பதிவு செய்தல், பதிவு திருமணம் போன்ற மக்களின் அத்தியாவசிய பணிகள் உள்ளாட்சி துறைக்கு உட்பட்ட நகராட்சி, கொம்யூன் பஞ்சா யத்துகளில் நடக்கிறது.
- புதுவை நகராட்சி பிறப்பு இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் 33 பேருக்கு பதிலாக 9 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். உழவர்கரை நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துக்களிலும் இதே நிலை உள்ளது.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்கள் அன்றாடம் பயன் பெறக்கூடிய துறைகளில் உள்ளாட்சி துறை முக்கியமான ஒன்று. வீட்டு வரி, பிறப்பு, இறப்பு பதிவு செய்தல், பதிவு திருமணம் போன்ற மக்களின் அத்தியாவசிய பணிகள் உள்ளாட்சி துறைக்கு உட்பட்ட நகராட்சி, கொம்யூன் பஞ்சா யத்துகளில் நடக்கிறது.
உள்ளாட்சி துறையில் பல பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ளதால் மக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிறந்த பதிவில் பெயர் மாற்றம்,பெயர் திருத்தம் போன்ற சிறு நடவடிக்கைகள் மேற்கொள்ள 3 மாத காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. மாணவர்களின் மாற்று சான்றிதழில் பிறப்பு திருத்தம் செய்ய பல துயரங்களை சந்திக்க வேண்டி உள்ளது.
அலைக்கழிப்பு ஏற்பட்டு மக்களிடையே வெறு ப்புணர்வு ஏற்படுகிறது. இதனால் பொது மக்களுக்கும் நகராட்சி ஊழியர்களுக்கும் தகராறு நிலவுகிறது. புதுவை நகராட்சி பிறப்பு இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் 33 பேருக்கு பதிலாக 9 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். உழவர்கரை நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துக்களிலும் இதே நிலை உள்ளது.
எனவே உள்ளாட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முதல்-அமைச்சர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்