search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அ.தி.மு.க. பொதுசெயலாளர் பதவிதடைக்கு ஓம்சக்திசேகர் வரவேற்பு
    X

    கோப்பு படம்.

    அ.தி.மு.க. பொதுசெயலாளர் பதவிதடைக்கு ஓம்சக்திசேகர் வரவேற்பு

    • அ.தி.மு.க.வின் உண்மையான விசு வாசிகள் ஜெயலலிதாவை மட்டுமே கட்சி நிரந்தர பொதுச் செயலாளர் என்று இன்றளவும் கூறி வருகின்றனர்.
    • ஒரு சுயநல கூட்டத்திற்கு ஜெயலலிதா ஆன்மா கொடுத்த சம்பட்டி அடி இந்த தடையாகும்.

    புதுச்சேரி:

    முன்னாள் எம்.எல்.ஏ. ஒம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    குறுக்கு வழியில் அடைய நினைக்கும் எந்த ஒரு பொருளும் பதவியும் நிலைக்காது என்பதற்கு உதாரணமாக அ.தி.மு.க. பொதுசெயலாளர் பதவிக்கான தேர்தலுக்கு நீதிமன்றம் அளித்த தடை அமைந்துள்ளது. அ.தி.மு.க.வின் உண்மையான விசு வாசிகள் ஜெயலலிதாவை மட்டுமே கட்சி நிரந்தர பொதுச் செயலாளர் என்று இன்றளவும் கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்தப் பதவியை குறுக்கு வழியில் தனது சுயநலத்திற்காக கபலிகரம் செய்ய முயற்சித்த ஒரு சுயநல கூட்டத்திற்கு ஜெயலலிதா ஆன்மா கொடுத்த சம்பட்டி அடி இந்த தடையாகும்.

    ஜெயலலிதா தனது உண்மையான விசுவாசியாக சுட்டிக்காட்டிய கட்சி ஒருங்கிணைப்பாளர், கட்சி பொருளாளர் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பி.எஸ். கரத்தை என்றும் வலுப்படுத்த புதுவை மாநிலக் கழகமும் தொண்டர்களும் துணை நிற்போம் என உறுதி அளித்து இந்த நீதிமன்ற தடையை வரவேற்று மகிழ்கிறோம்.

    இவ்வாறு ஒம்சக்தி சேகர் அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×