search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வளர்ச்சிக்கான சிறப்பான பட்ஜெட்-ஓம்சக்திசேகர் பாராட்டு
    X

    கோப்பு படம்.

    வளர்ச்சிக்கான சிறப்பான பட்ஜெட்-ஓம்சக்திசேகர் பாராட்டு

    • ஒட்டுமொத்த இந்தியாவும், உலகமும் எதிர் நோக்கி இருந்த பட்ஜெட்டை சிறப்பாக நிதி மந்திரி தாக்கல் செய்துள்ளார். மாநில அரசுக்கு வழங்கும் வட்டியில்லா கடன் இன்னும் ஒரு வருடத்துக்கு நீடிக்கப்படும்.
    • சுற்றுலாத்துறை உருவாக்க தனி செயலி, அஞ் சலகத்தில் முதியோருக்கு வைப்பு நிதி வரம்பு 15 லட்சத்திலிருந்து 30 லட்சமாக உயர்த்தியது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்திசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது:-

    சிறப்பான பட்ஜெட்

    ஒட்டுமொத்த இந்தியாவும், உலகமும் எதிர் நோக்கி இருந்த பட்ஜெட்டை சிறப்பாக நிதி மந்திரி தாக்கல் செய்துள்ளார். மாநில அரசுக்கு வழங்கும் வட்டியில்லா கடன் இன்னும் ஒரு வருடத்துக்கு நீடிக்கப்படும்.

    ரெயில்வே துறைக்கு 2 லட்சம் கோடி, டிவி,செல்போன் உதிரி பாகங்கள் இறக்குமதி வரி குறைப்பு, மாசு ஏற்படுத்தும் வாகனங்கள் அகற்றும் திட்டத்திற்கு கூடுதல் நிதி, 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி, அனைத்து மாநில பொருட்களும் கிடைக்கும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு வணிக வளாகம் அமைக்கப் படும். 7.5 சதவீத வட்டியில் பெண்களுக்கு புதிய சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

    சுற்றுலாத்துறை உருவாக்க தனி செயலி, அஞ் சலகத்தில் முதியோருக்கு வைப்பு நிதி வரம்பு 15 லட்சத்திலிருந்து 30 லட்சமாக உயர்த்தியது. ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை அளவு 4.5 லட்சத்திலிருந்து 9 லட்சம் ஆக உயர்த்தியது, நகர்ப்புற கட்டமைப்பு வளர்ச்சிக்கு 10 ஆயிரம் கோடி, 2020 ஆம் ஆண்டு வாகன புகை இயக்கத்தை பூஜ்ஜியமாக நடவடிக்கை.

    நாடு முழுவதும் புதிய நர்சிங் கல்லூரிகள், தோட்டக்கலை வளர்ச்சி, புதுவை மாநிலத்திற்கு ஜி.எஸ்.டி. நிதி ஒதுக்கீடு,போன்ற பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.

    வரலாற்று சிறப்பு மிக்க அனைத்து தரப்பு மக்கள் வளர்ச்சி யை உள்ளடக்கிய பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் மிக சிறப்பான பட்ஜெட்.

    இவ்வாறு அவர் குறிப் பிட்டுள்ளார்.

    Next Story
    ×