search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Old lady murder case"

    • திண்டுக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக இருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
    • 2½ பவுன் தங்கசெயினை பறித்து க்கொண்டு மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பியது தெரியவந்து. போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகில் உள்ள ரெட்டியபட்டிைய சேர்ந்தவர் திவேஸ்மேரி(62). இவருக்கு திருமணமாக வில்லை. அதேபகுதியில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவரது வீட்டின் மேற்கூரை பெயர்ந்து இருந்ததால் கொள்ளையடிக்கும் நோக்கில் மூதாட்டியை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீ சார் விசாரணை நடத்தி வந்தனர்.

    மாவட்ட எஸ்.பி பாஸ்க ரன் உத்தரவின்பேரில் ரூரல் டி.எஸ்.பி உதயகுமார் ஆலோசனையில், தாலுகா இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகணேஷ் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக இருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள்தான் மூதாட்டியை கொலை செய்தது என உறுதியானது. இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், ரெண்டலப்பாறையை சேர்ந்த ஸ்டீபன்ராஜா(24) என்பவர் ஜே.சி.பி டிரைவ ராக வேலைபார்த்து வரு கிறார். இவருக்கு கடன்பி ரச்சினைகள் இருந்துள்ளது. இதனால் திவேஸ்மேரியிடம் பணம் கேட்டுள்ளார்.

    அதற்கு அவர் பணம் தர மறுத்துள்ளார். இதனால் அரசு ஐ.டி.ஐ அருகே கடை நடத்தி வரும் முத்துராஜா(43) என்பவரிடம் தனது பிரச்சி னைகளை ஸ்டீபன்ராஜா தெரிவித்தார். அதற்கு முத்துராஜா தன்னிடமும் பணம் இல்லை. திவேஸ்மேரி வீட்டில் பணம் மற்றும் நகை உள்ளது. அவர் வீட்டில் கொள்ளையடி த்தால் நமது 2 பேரின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று கூறினார்.

    அதன்படி ஸ்டீபன்ராஜா மற்றும் முத்துராஜா தனது 17 வயது மகனுடன் அவரது வீட்டிற்கு சென்றனர். பின்னர் சிறுவனை மேற்கூரையின் மீது ஏறவிட்டு ஓட்டைபிரித்து உள்ளே இறங்க செய்தனர்.

    உள்ளே சென்ற சிறுவன் கதவை திறந்து ஸ்டீபன்ராஜா மற்றும் முத்துராஜாவை உள்ளே வரவழைத்துள்ளார். அவர்கள் 2 பேரும் சேர்ந்து திவேஸ்மேரியிடம் பணம் மற்றும் நகை உள்ளதா என கேட்டுள்ளனர். அவர் தன்னிடம் எதுவும் இல்லை என்று கூறவே அவர் அணிந்திருந்த 2½ பவுன் தங்கசெயினை பறித்து க்கொண்டு அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பிஓடினர்.

    அதன்பின்னர் போலீசார் தேடியதால் நகையை விற்க முடியாமல் அலைந்து வந்துள்ளனர். இந்நிலையில் போலீசார் அவர்களை கைது செய்து நகையையும் பறிமுதல் செய்தனர்.

    ×