search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "of water comes"

    • இதில் அவர்கள் 2 பேரும் கீேழ விழுந்து படுகாயம் அடைந்தனர்.
    • இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நல்லகவுண் டன் பாளையத்தை சேர்ந்த வர் மாகாளி என்ற மூர்த்தி (வயது 50). கூலி தொழிலாளி.

    இவருக்கு பெரிய அம்மணி என்ற மனைவியும், ரங்கசாமி (27) என்ற மகனும், ரங்கநாயகி (24), ஸ்ரீதேவி (20) என்ற மகளும் உள்ளனர். ரங்கசாமி கோவை விமான நிலையத்தில் தொழிலாளி யாக வேலை செய்து வரு கிறார்.

    இந்த நிலையில் மகாளி யின் மகன் ரங்கசாமிக்கும் கெட்டிசெவியூர் பகுதியை சேர்ந்த கோகிலா என்ற பெண்ணுக்கும் நேற்று காலை சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவிலில் திருமணம் நடந் தது.

    திருமணம் முடிந்து மணமக்கள் மற்றும் அவரது உறவினர்கள் வேனில் நல்ல கவுண்டன் பாளையத்துக்கு சென்றனர்.

    இதை தொடர்ந்து மாகாளி மற்றும் அவரது மகள் ரங்கநாயகி ஆகிய இருவரும் கோவிலில் மற்ற வேலைகளை முடித்து கொண்டு அவர்கள் நேற்று மாலை 2 பேரும் மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தனர்.

    மொபட்டை மாகாளி ஓட்டி சென்றார். ரங்கநாயகி அவரது பின்னால் அமர்ந்து இருந்தார். அவர்கள் கோபி செட்டிபாளையம் அடுத்த கொடிவேரி பிரிவு அருகே சென்றார்.

    அப்போது மாகாளிக்கு உடல் நிலை சரியில்லாததால் மொபட்டை நிறுத்த முயன்றார். அதற்குள் நிலை தடுமாறி அருகே இருந்த பள்ளத்தில் மொபட் விழுந்தது. இதில் அவர்கள் 2 பேரும் கீேழ விழுந்து படுகாயம் அடைந்தனர்.

    இதை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு ஆம்பு லன்சு மூலம் கோபிடெ்டி பாளையம் அரசு ஆஸ்பத்திரி க்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர் கள் மாகாளி ஏற்க னவே இறந்து விட்டதாக கூறினர். இதை தொடர்ந்து ரங்க நாயகி கோபி செட்டி பாளையம் அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகிறது.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
    • மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மற்ற பிரதான அணைகளான குண்டேரி பள்ளம், வரட்டு பள்ளம், பெரும்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவு எட்டியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு . மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த 17-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது.

    அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,200 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2300 கன அடி தண்ணீர் திறந்து விட்ட நிலையில் இன்று முதல் கீழ் பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

    தடப்பள்ளி -அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 300 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 900 கன அடி என மொத்தம் 1,200 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மற்ற பிரதான அணைகளான குண்டேரி பள்ளம், வரட்டு பள்ளம், பெரும்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவு எட்டியுள்ளது. 

    ×