search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nursing course"

    • தேர்வு முடிவு ஜூலை 17-ந் தேதிக்குள் வெளியிடப்படும்.
    • ஜிப்மர் இணையதளத்தில் பார்வையிடலாம் என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் எம்.எஸ்.சி அலைடு ஹெல்த் சயின்ஸ் பாடப்பிரிவுகள் 23, எம்.எஸ்.சி நர்சிங் 31, எம்.பி.எஸ் 34, பி.பி.டி.என் 19, இதர பட்ட மேற்படிப்புகள் 12 என மொத்தம் 119 இடங்கள் உள்ளன.

     இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைனில் நுழை வுத்தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த கல்வியண்டுக்கான படிப்புகளுக்கு நுழை வுத்தேர்வு வரும் ஜூலை 2-ந் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை நடக்கிறது.

    ஜூன் 14-ந் தேதி மாலை 4.30 மணி வரை மாணவர்கள் ஜிப்மர் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். நுழைவுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை ஜூன் 23-ந் தேதி காலை 11 மணி முதல் ஜூலை 2-ந் தேதி காலை 8 மணி வரை பதிவிறக்கம் செய்யலாம். நுழைவுத்தேர்வு புதுவை, பெங்களூரு, சென்னை உட்பட 10 நகரங்களில் நடத்தப்படுகிறது. தேர்வு முடிவு ஜூலை 17-ந் தேதிக்குள் வெளியிடப்படும்.

    இந்த பாடப்பிரிவுக்கான கலந்தாய்வு பின்னர் அறிவிக்கப்படும். மேலும் விபரங்களை ஜிப்மர் இணையதளத்தில் பார்வையிடலாம் என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    பெற்றோரை இழந்த ஏழை மாணவி கட்டணமின்றி நர்சிங் படிக்க கலெக்டர் கந்தசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.
    திருவண்ணாமலை:

    போளூர் தாலுகா வெள்ளூர் கிராமத்தை சேர்ந்த கீர்த்தனா என்பவர் கடந்த மாதம் 9-ந் தேதி கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியை சந்தித்து, தான் கண்ணமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ இன் நர்சிங் முதலாம் ஆண்டு படிப்பதாகவும், வயதான பாட்டியால் படிக்க வைக்க முடியாத நிலையில் தொடர்ந்து படிக்க உதவிடுமாறும் கோரிக்கை வைத்தார். இதுகுறித்து விசாரணை செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    விசாரணையில், அந்த மாணவி கண்ணமங்கலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் படித்து வருவதும், கீர்த்தனாவிற்கு 5 வயது இருக்கும் போது அவரது தாய், தந்தை இருவரும் இறந்துவிட்டதும் அதன் பின்னர் அவரது பாட்டி அம்பிகா, அவரை வளர்த்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.

    இதனையடுத்து கலெக்டர் கந்தசாமி, கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு மாணவி கீர்த்தனாவின் குடும்ப நிலையினை சொல்லி கட்டணமின்றி படிக்க உதவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார். அதைத் தொடர்ந்து, மாணவி கீர்த்தனா கட்டணமின்றி படிப்பதற்கான பரிந்துரை கடிதத்தினை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, கல்லூரி முதல்வர் ஜெயசூரியா ஜார்ஜிடம் வழங்கினார்.

    மாணவி கீர்த்தனா செலுத்த வேண்டிய அனைத்து கட்டணங்களில் இருந்தும் முழுவதுமாக கல்லூரி நிர்வாகத்தால் விலக்கு அளிக்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மாணவி கீர்த்தனா, கலெக்டருக்கு நன்றி தெரிவித்தார்.
    ×