என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Numeracy program"

    • 1 முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு திட்டம்
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    அரக்கோணம்:

    பாணாவரம் அடுத்த ரங்காபுரம் அரசு ஆரம்பப் பள்ளியில் முதல் அமைச்சரின் எண்ணும் எழுத்தும் திட்ட விளக்க பெற்றோர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் திருமதி ஜெயம்மாள் விஜயராகவன் தலைமை தாங்கினார். ஊராட்சி துணைத் தலைவர் திருமதி சரண்யா மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் திருமதி கற்பகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக் கூட்டத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு எண்ணும், எழுத்தும் திட்டத்தைப் பற்றி தலைமை ஆசிரியர் பாஸ்கரன் விளக்கி கூறினார். மற்றும் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    முதலமைச்சரின் எண்ணும் எழுத்தும் திட்டத்தை சிறப்பாக செயல்பாடுத்துதல், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை புதிய ஆசிரியரை கொண்டு உடனே நிரப்ப கோருதல், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை சிறப்பாக நடைப்பெற்றதையொட்டி பாராட்டுதல், புதிய ஆசிரியரை நியமிக்கும் வரை புரவல ஆசிரியருக்கு ஊதியம் வழங்க உதவுதல், இல்லம் தேடிக் கல்வி மையத்தை சிறப்பாக நடைப்பெற கண்காணித்து உதவுதல் மற்றும் அதன் செயல்பாடுகளை ஊக்குவித்தல், பல ஆண்டுகளாக பழுதுபார்க்காமல் உள்ள பள்ளி கட்டிடங்களை உடனே பழுபார்க்க அதிகாரிகளை கோருதல், சுகாதார பணியாளர்களை நியமிக்க உதவுதல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் பெரும்பான்மையான பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் புரவல ஆசிரியர்கள் திருமதி ரேவதி குணா ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவாக புரவல ஆசிரியர் ராதிகா நன்றி கூறினார்.

    ×