search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "notes rupees"

    • 500 ரூபாய் நோட்டுகள் கிழிந்த நிலையிலும், டேப் ஒட்டியிருந்ததாலும் திருமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார்.
    • பணம் எடுக்கும்போது இதுபோன்ற கிழிந்த நோட்டுகள் வந்ததால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே எத்தலப்பநாயக்கனூரை சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது31). இவர் வேடசந்தூரில் உள்ள தனியார் மில்லில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

    அய்யலூரில் இருந்து எரியோடு செல்லும் சாலையில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்.மில் நேற்று இரவு ரூ.4 ஆயிரம் பணம் எடுத்துள்ளார். அதில் 500 ரூபாய் நோட்டு 7, 200 ரூபாய் நோட்டு 2, 100 ரூபாய் நோட்டு 1 வந்துள்ளது.


    இதில் 500 ரூபாய் நோட்டுகள் கிழிந்த நிலையிலும், டேப் ஒட்டியிருந்ததாலும் திருமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார். மேலும் பணம் எடுத்தற்கான குறுஞ்செய்தியும் தாமதமாக வந்துள்ளது.

    அவசர தேவைக்காக பணம் எடுக்கும்போது இதுபோன்ற கிழிந்த நோட்டுகள் வந்ததால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற தவறுகள் ஏற்படாமல் ஏ.டி.எம். எந்திரங்களில் நல்ல நிலையில் உள்ள நோட்டுகளை மட்டும் வைக்க அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

    ×