search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Northern Gang"

    • சிறுவனை ஏமாற்றி துணிகரம்
    • ஒருவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி முஹம்மத் அலி பஜார் பகுதியில் நகை கடை நடத்தி வருபவர் நேமிசந்த். இவர் நேற்று மதியம் உணவு இடைவேளையில் தனது மகன் சுஜல் (16) என்பவரை கடையில் விட்டு சென்றுள்ளார்.

    அப்போது கடையில் சிறுவன் தனியாக இருப்பதை அறிந்து வட மாநிலத்தை சேர்ந்த 2 பேர் கடையில் நகையை வாங்க வருவது போல சிறுவனிடம் போக்கு காட்டி சிறுவன் நகையை காண்பித்துக் கொண்டிருக்கும் போது நகை பெட்டியில் வைத்திருந்த 2 நகை பொட்ட லங்களை எடுத்துக்கொண்டு தப்பி ஓடி உள்ளனர். தன்னந்தனியாக சுதாரித்து சிறுவன் பஜார் பகுதியில் தப்பி ஓடிய திருடர்களை துரத்தி பிடிக்க ஓடினான்.

    அப்போது பொதுமக்கள் உதவியுடன் ஒருவனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த முஹம்மத் பாஷா என்பது தெரிய வந்துள்ளது.

    மேலும் நகையுடன் தப்பி ஓடிய மற்றொரு நகை திருடனை போலீசார் தேடி வருகின்றனர். பட்டப் பகலில் பஜார் பகுதியில் நடந்த இந்த நகை திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×