search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "night prayer"

    தஞ்சை அருகே பூண்டி மாதா பேராலயத்தில் உலக நன்மைக்காக புதுமை இரவு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    தஞ்சை அருகே பூண்டி மாதா பேராலயத்தில் உலக நன்மைக்காக புதுமை இரவு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அருட்தந்தை அற்புதராஜ் தலைமையில் அருள் பொழிவு திருப்பலி நடைபெற்றது.

    பின்னர் அலங்கரிக்கப்பட்ட புதுமை மாதா சொரூபம் ஆலயத்தை சுற்றி வந்தது. இதை தொடர்ந்து இரவு ஜெப வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

    நிகழ்ச்சியில் பூண்டி மாதா பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியானமைய இயக்குனர் குழந்தைசாமி உதவி பங்குதந்தையர்கள், ஆன்மிக தந்தையர்கள் கலந்து கொண்டனர். புதுச்சேரி இளையோர் பணிக்குழு செயலாளர் அற்புதராஜ் புதுமை இரவு வழிபாட்டினை நடத்தினார்.
    ×