search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Year Presenting Program"

    • மாணவர்கள் கொடுக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தினார்.
    • மாணவர்களின் நலனுக்காக பள்ளி கல்வி துறைக்கு அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் தியாகராஜா தொடக்க பள்ளியில் இல்லம் தேடி கல்வி மையத்தில் படிக்கும் பெற்றோரை இழந்த மாணவ- மாணவிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் ரவிகண்ணன் முன்னிலை வகித்தார். இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் வரவேற்றார்.மாதா அமிர்தானந்த மயி மடத்துடன் இணைந்த மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் பெற்றோரை இழந்த 126 மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.1000 மதிப்பிலான புத்தாடைகள் வழங்கப்பட்டது.

    முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரி மாணவர்களுக்கு புத்தாடைகளை வழங்கி பேசுகையில், மாணவர்கள் சிறு வயதில் இருந்தே கொடுக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். எங்களிடம் என்ன இருக்கிறது கொடுப்பதற்கு? என்று நீங்கள் கேட்கலாம்.சக மாணவர்களுக்கு ஆதரவு, பாராட்டு, நம்பிக்கை அளிப்பது என எல்லாமே உதவிகள் தான். மாணவர்களின் நலனுக்காக பள்ளி கல்வி துறைக்கு அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதனைப் பயன்படுத்தி நாட்டிற்கும், குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் பயனுள்ள வர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும் என்றார்.

    மக்கள் கல்வி நிறுவன இயக்குநர் கஜேந்திரன், சிவகாசி மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) எம்பெருமான், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜோதி மணிராஜன், தலைமை ஆசிரியர் பழனிச்சாமி, பள்ளிக்குழு தலைவர் ஆதிநாராயணன் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார இல்லம் தேடி திட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

    ×