என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "New Sarvodaya Sangam Building"
- விற்பனையை அதிகரிப்பதற்காக மத்திய, மாநில அரசுகளால் மானியம் வழங்கப்படுகிறது.
- இந்திய காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்தலைவர் மனோஜ்குமார் திறந்து வைத்தார்.
பல்லடம் :
பல்லடம் - பொள்ளாச்சி சாலையில் சர்வோதய சங்க கட்டிடம் உள்ளது. இந்த நிலையில் பழைய காதி பவன் கடைகளை புதுப்பித்து விற்பனையை அதிகரிப்பதற்காக மத்திய, மாநில அரசுகளால் மானியம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கே.ஆர்.டி.பி.திட்டத்தில், பல்லடத்தில் உள்ள சர்வோதய சங்க கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது. மேலும் அருகிலேயே பணிமனை ஒன்றும் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.புதிய கட்டடங்களை, இந்திய காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்தலைவர் மனோஜ்குமார் திறந்து வைத்தார். வாரியத்தின் தென் மண்டல தலைவர் பாண்டே, வாரியத்தின் தமிழ்நாடு இயக்குனர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்லடம் சர்வோதய சங்க செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். கட்டிடங்களைத் திறந்து வைத்த வாரியத் தலைவர் மனோஜ் குமார் கதர்வாரிய பொருட்களை பார்வையிட்டார்.
பின்னர் கதர்வாரிய உறுப்பின ர்களுடன் அமர்ந்து மதிய உணவு உண்டார். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் சர்வோதய சங்க தலைவர் ஆறுச்சாமி, பொருளாளர் பழனிச்சாமி, அலுவலர் ஜெயபால் மற்றும் தமிழ்நாடு சர்வோதய சங்க நிர்வாகிகள்,சமூக ஆர்வலர்கள் ரமேஷ், மஞ்சுநாதன்,நெசவாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்