என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "New machine"
- கோவிலுக்கு வரும் பக்தர்கள் பணம் மற்றும் தங்கம், வெள்ளி பொருட்களை கோவில் உண்டியலில் போடுகின்றனர்.
- 5 அளவுள்ள நாணயங்களை தனித்தனியாக பிரிக்க புதிய எந்திரம் ரூ.2.5 லட்சம் மதிப்பில் கோவையில் இருந்து வாங்கப்பட்டுள்ளது.
பழனி:
தமிழ்கடவுள் முருகனின் 3-ம் படைவீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இதில் பலர் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மேலும் வேண்டுதல் நிறைவேறியவுடன் காவடி எடுத்தும், தங்கதேர் இழுத்தும் பக்தர்கள் முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பணம் மற்றும் தங்கம், வெள்ளி பொருட்களை கோவில் உண்டியலில் போடுகின்றனர். இந்த உண்டியல் குறிப்பிட்ட காலத்தில் திறக்கப்பட்டு எண்ணப்படுகிறது. அவ்வாறு கிடைக்கும் வருவாய் அன்னதானம் மற்றும் கோவில் பராமரிப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரூபாய் நோட்டுகளுடன் பலவகை நாணயங்களும் உண்டியலில் போடப்படுகிறது.
அவற்றை எண்ணுவதற்காக வங்கி ஊழியர்கள், கல்லூரி மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது 2 அளவுகளில் நாணயங்களை பிரிக்க ஒரு எந்திரம் கோவிலில் உள்ளது.இருப்பினும் காணிக்கை நாணயங்களை பிரிக்க தாமதம் ஏற்படுகிறது. இதனால் 5 அளவுள்ள நாணயங்களை தனித்தனியாக பிரிக்க புதிய எந்திரம் ரூ.2.5 லட்சம் மதிப்பில் கோவையில் இருந்து வாங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உண்டியல் என்னும் பணி எளிதாகவும், விரைவாகவும் நடக்கும் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்