search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New family card for 10 people"

    • ரூ.57 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்
    • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு விழா மற்றும் விவசாயிகள் மாநாடு நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஜமாபந்தி அலுவலர் சிப்காட் நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத் தலைமை வகித்தார். தாசில்தார் கி.வெங்கடேசன் வரவேற்றார்.

    மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், நகர மன்ற தலைவர் மோகனவேல், நகர மன்ற உறுப்பினர் விஸ்வநாதன், விவசாய சங்க பிரிதிநிதிகள் புருஷோத்தமன், கிரண் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ கலந்துகொண்டு 109 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, 16 பேருக்கு பட்டா மாறுதல் சான்று, 31 பேருக்கு உட்பிரிவு பட்டா மாறுதல் சான்று, 23 பேருக்கு சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியம், 10 பேருக்கு புதிய குடும்ப அட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 15 பேர் உள்ளிட்ட 204 பேருக்கு ரூபாய் 57 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் வருவாய்த்துறை சங்கப் பிரதிநிதிகள் பாஸ்கரன், ஸ்ரீதர், ரமேஷ் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர்கள் தினகரன், ஞானவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் எஸ். ராஜலட்சுமி நன்றி கூறினார்.

    ×