search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nei deepam"

    • 9 தீபம் ஏற்ற நவகிரக தோஷம் நீங்கும்
    • 108 தீபம் ஏற்ற நினைத்த காரியம் கைகூடும்

    * 1 தீபம் ஏற்ற மன அமைதி கிட்டும்

    * 3 தீபம் ஏற்ற கல்வி அறிவு உண்டாகும்

    * 9 தீபம் ஏற்ற நவகிரக தோஷம் நீங்கும்

    * 12 தீபம் ஏற்ற ஜென்மராசி தோஷம் நீங்கும்

    * 18 தீபம் ஏற்ற திருமணம் கைகூடும்

    * 27 தீபம் ஏற்ற நட்சத்திர தோஷம் நீங்கும்

    * 48 தீபம் ஏற்ற தீராதநோய் தீரும்

    * 108 தீபம் ஏற்ற நினைத்த காரியம் கைகூடும்

    * 504 தீபம் ஏற்ற கடன் தொல்லை தீரும்

    * 1008 தீபம் ஏற்ற சந்தான பாக்கியம் சித்திக்கும்

    நமது பற்றுகளை ஆசைகளை இறைவனிடம் தெரிவிக்கச் செல்லும் பக்தர்கள் நெய் விளக்கேற்றினால் நினைத்தது நிறைவேறும் என்று கூறுகின்றனர் ஞானிகள்.
    இருளை விலக்குவது விளக்கு. அருளை வழங்குவது விளக்கு. ஜோதியை வழிபட்டால் ஒளி மயமான வாழ்க்கை உருவாகும் என்பதால் ஜோதியோடு லெட்சுமியை ஒப்பிட்டு ஜோதிலெட்சுமி என்று சொல்வார்கள்.

    ஆதிலெட்சுமியும், ஜோதிலெட்சுமியும் உங்களுக்கு அருள் கொடுத்தால் பாதியில் நின்ற பணிகள் கூட பரபரப்பாக முடிவடையும். பணத்தேவைகளுள் பூர்த்தியாகும். மின் விளக்கிற்கும் நெய் விளக்கிற்கும் ஒரு மிகப்பெரிய வேறுபாடு உண்டு. ஒரு மின் விளக்கை மற்றொரு மின்விளக்கோடு ஒட்டி வைத்தால் பற்றிக் கொள்ளாது.

    ஆனால் அதே சமயம் ஒரு எரியும் நெய் விளக்கை மற்றொரு நெய் விளக்கோடு ஒட்டி வைத்தால், அதுவும் பற்றிக் கொண்டு எரியத் தொடங்கும் எனவே நமது பற்றுகளை ஆசைகளை இறைவனிடம் தெரிவிக்கச் செல்லும் பக்தர்கள் நெய் விளக்கேற்றினால் நினைத்தது நிறைவேறும் என்று கூறுகின்றனர் ஞானிகள்.
    ×