என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Neem tree that fell"

    • திண்டுக்கல்லில் நேற்று மாலை வழக்கத்தை விட பலத்த சூறைக்காற்று வீசியதால் நேருஜி நகரில் சுமார் 60 ஆண்டு பழமையான வேப்பமரம் கிளை முறிந்து மின் வயரில் விழுந்தது.
    • இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் ஆடி மாதம் ெதாடங்கியதில் இருந்து பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் பைக்கில் செல்பவர்கள் மட்டுமல்லாது பாதசாரிகளும் அவதி அடைந்து வருகின்றனர்.

    திண்டுக்கல்லில் நேற்று மாலை வழக்கத்தை விட பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் நேருஜி நகரில் சுமார் 60 ஆண்டு பழமையான வேப்பமரம் கிளை முறிந்து மின் வயரில் விழுந்தது.

    இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மின் தடை ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மின் வாரியத்துக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த உதவி மாவட்ட அலுவலர் சிவக்குமார் தலைமை யிலான தீயணைப்புத்து றையினர் சுமார் 1 மணி நேரம் போராடி மரத்தை அப்புறப்படுத்தினர்.

    பின்னர் மின்வாரிய ஊழியர்கள் மின் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

    ×