என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "NCC camp"
- குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜே.கே.கே. ரங்கம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பர்கூர் மலைவாழ் உண்டு உறைவிட பள்ளி மாணவ, மாணவியர் 60 பேர் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம்.பாலிடெக்னிக் கல்லூரி பஸ் மூலம் பயிற்சி மையத்திற்கு புறப்பட்டனர்.
- பயிற்சியில் துப்பாக்கி சுடுதல், துப்பாக்கி பார்ட்ஸ் எல்லாம் கழட்டி மீண்டும் பூட்டுதல், ஓட்டம், உயரம் தாண்டுதல், தடகள ஓட்டம், மலை ஏறுதல், உள்ளிட்ட பல பயிற்சிகளும், மன அமைதிக்கு பாட்டு, நடனம் உள்ளிட்ட கலை நிகழ்சிகளும் நடைபெறவுள்ளன.
குமாரபாளையம்:
15வது என்.சி.சி. பட்டாலியன் சார்பில் நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவ, மாணவியர்களுக்கு ஆண்டு தோறும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பயிற்சி நேற்று முதல் ஈரோடு கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் தொடங்கியது.
இதில் பங்கேற்பதற்காக குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜே.கே.கே. ரங்கம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பர்கூர் மலைவாழ் உண்டு உறைவிட பள்ளி மாணவ, மாணவியர் 60 பேர் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம்.பாலிடெக்னிக் கல்லூரி பஸ் மூலம் பயிற்சி மையத்திற்கு புறப்பட்டனர்.
என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி உள்ளிட்ட அலுவலர்கள் உடன் சென்றனர். கமாண்டிங் அலுவலர் அணில்வர்மா, நிர்வாக அலுவலர் கிருஷ்ண மூர்த்தி உத்திரவின் பேரில், சுபேதார் மேஜர் செந்தில்குமார், கம்பெனி ஹவில்தார் மேஜர் அப்துல் காதர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட என்.சி.சி. அலுவலர்கள் பயிற்சி கொடுத்தனர்.
இந்த பயிற்சியில் துப்பாக்கி சுடுதல், துப்பாக்கி பார்ட்ஸ் எல்லாம் கழட்டி மீண்டும் பூட்டுதல், ஓட்டம், உயரம் தாண்டுதல், தடகள ஓட்டம், மலை ஏறுதல், உள்ளிட்ட பல பயிற்சிகளும், மன அமைதிக்கு பாட்டு, நடனம் உள்ளிட்ட கலை நிகழ்சிகளும் நடைபெறவுள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்