search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "natural figures"

    • பேராவூரணி அருகே இல்லம் தேடி கல்வி தன்னார்வலரால் சுற்றுசூழல் தின விழிப்புணர்வு மணல் சிற்பம் உருவாக்கப்பட்டது.
    • அப்துல்கலாம், இயற்கை உருவங்கள் ஆகியவற்றை மணல் சிற்பம் மூலம் உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள காலகம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரதி. இவர் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் தன்னார்வலராகப் பணியாற்றி வருகிறார். இவரிடம் 20- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    ரதி மணல் சிற்பம் உருவாக்குவதில் திறமை மிக்கவர். ஏற்கனவே அப்துல்கலாம், இயற்கை உருவங்கள் ஆகியவற்றை மணல் சிற்பம் மூலம் உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.

    இந்நிலையில், உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளார். இதனை இல்லம் தேடிக் கல்வித் திட்டம் ஒருங்கிணைப்பாளர்கள் ராமநாதன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் சமூகஆர்வலர்கள், பொதுமக்கள் பார்வையிட்டு பாராட்டினர்.

    ×