search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Rural Work"

    • ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமையல் கூடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மதுபாலன் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் அருண்தம்புராஜ் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குப்பநத்தம் ஊராட்சி கு.நல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 31.42 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெறு வதையும், அதன் அருகே அப்பள்ளிக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமையல் கூடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

    வடலூர் நகராட்சி பகுதியில் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி திட்டத்தின் கீழ் ரூ.5.85 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருவதையும், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நைனார்குப்பம் - வடலூர் சபை சாலை, முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.39.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தையும், ரெங்கநாதபுரம் ஊராட்சியில் மேட்டுவெளி பகுதியில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு ரூ.8.3 கோடி மதிப்பீட்டில் 300 சதுரஅடி அளவில் ஓடு பதித்த தரை தளத்துடன் கூடிய 4 வீடுகள் கொண்ட 41 தொகுப்புகள் மற்றும் 2 தனிவீடுகள் என மொத்தம் 166 வீடுகளுக்கான கட்டு மான பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலூர் முதுநகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயா ளிகள் பிரிவின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மருந்து இருப்பு குறித்து ஆய்வு செய்து, அங்குள்ள பொதுமக்களிடம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மதுபாலன் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • கள்ளக்குறிச்சியில் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டப்பணி ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன், கார்த்திகேயன், மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் புதிதாக நிய–மனம் செய்யப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் பணி ஒருங்கிணைப்பாளர்கள் 39 பேருக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஒன்றிய குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கி னார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ரங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பயிற்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பணியாளர்களுக்கு வேலைக்கான அட்டை வழங்குதல், பணியாளர் களுக்கான ஊதியம் குறித்த புகார்களை தீர்த்து வைத்தல், நலிவுற்ற குடும்பங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு பணி வழங்குதல், புதிய நபர்களை பதிவு செய்து அதற்கான வேலை அட்டை வழங்குதல், பணித்தளத்தில் வேலை ஒதுக்கீடு செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வது குறித்து ஒருங்கிணைப் பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன், கார்த்திகேயன், மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    ×