என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National holiday"

    • சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காததால் நடவடிக்கை
    • 115 நிறுவனங்களில் ஆய்வு

    திருவண்ணாமலை:

    சுதந்திர தினத்தையொட்டி நேற்று கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார்போக் குவரத்து நிறுவனங்களில் தேசிய விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் இதுபோன்ற நாட்களில் பல நிறுவனங்கள் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை விடுமு றைகள்) சட்டம் 1958, உணவு நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகள் 1958, மோட்டார் போக்குவரத்து தொழிலாளர்கள் சட்டம் 1961 மற்றும் விதிகள் கீழ் பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்காமல் மற்றும் மாற்று விடுமுறை அளிக் காமலும், அதற்கான முறையான அறிவிப்பு அளித்து அனுமதி பெறாமல் பணியாளர்களை பணிக்கு அமர்த்தி வருகின்றன.

    இதனை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்காக திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி தலைமையில் துணை ஆய்வாளர்கள் மனோகரன், சாந்தி, உதவி ஆய்வாளர்கள் சாந்தி, ஆத்திப்பழம், சுபாஷ்சந் தர், மாலா, வெங்கடேஷ் ஆகியோர் திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் மொத்தம் 115 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 36 நிறுவனங்களிலும், உணவு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 34 நிறுவனங்களிலும், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 4 நிறுவனங்களிலும் என மொத்தம் 74 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

    அதனை தொடர்ந்து மேற்கண்ட நிறுவன உரிமையாளர்கள் மீது சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ×