search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Natham Mariamman kovil"

    • நத்தம் மாரியம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
    • மேலும் பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன்னை செய்தனர்.

    நத்தம்:

    நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த மாதம் 20ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறுநாள் உலுப்பகுடி அருகே உள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் புனித நீராடி மஞ்சள் ஆடைகள் அணிந்து கோயிலுக்கு வந்து காப்பு கட்டி 15நாட்கள் விரதம் தொடங்கினர்.

    அன்றிரவு அம்மன் குளத்தி லிருந்து கம்பம் நகர்வலமாக எடுத்துவரப்பட்டு கோவி லில் ஸ்தாபிதம் செய்ய ப்பட்டது.

    தொடர்ந்து மாரியம்ம னுக்கு மஞ்சள் திருப்பா வாடை ஊர்வலமாக எடுத்து வந்து காணிக்கையாக செலுத்தினர்.அன்று அரண்மனை பொங்கல் வைத்தல், காவடி எடுத்து வருதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடந்தது.நேற்று அதிகாலையிலிருந்து பிற்பகல் வரை பக்தர்கள் அக்கினிசட்டி எடுத்தல், அலகு குத்தி வருதல், மாறுவேடமணிந்து வருவது மற்றும் பறவை காவடிகள், போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடந்தது.

    மேலும் மேளதாளம் முழங்க தாம்பாளத்தில் அம்மனுக்காக அர்ச்சனை பொருட்களை மஞ்சள் துணியால் கட்டிக் கொண்டு ஊர்வலமாக பக்தர்கள் வந்தனர். அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து பூக்குழி இறங்க சென்றனர். முன்னதாக கோவில் முன்பாக கழுகு மரம் ஊன்றப்பட்டிருந்தது.

    பின்னர் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது.அதைதொடர்ந்து 15 நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழியில் பூசாரிகள் இறங்கிய பின்னர் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக இறங்கினர்.

    முன்னதாக பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக கரும்புதொட்டில்கள் எடுத்தல், அங்கப்பிரத ட்சணம் செய்தல், மாவி ளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் போன்றவைகளும், பூக்குழியில் போடுவதற்காக விறகு கட்டைகளையும், உப்பு, மிளகு பொட்டலங்க ளையும் காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர்.

    நேற்று இரவு கோவிலி லிருந்து கம்பம் அம்மன் குளத்தில் கொண்டு போய் சேர்க்கப்பட்டது. இன்று புதன் கிழமை காலையில் மாரியம்மன் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து இரவு அலங்கரி க்கப்பட்ட பூப்பல்லக்கில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி அம்மன் குளத்திலிருந்து புறப்படும்.

    • நத்தம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான பாலாலய பணிகள் தொடங்கியது
    • நத்தம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கு ஆயத்தம்

    நத்தம் :

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். சுமார் 400 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் ஏற்கனவே 14 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேக விழா நடந்தது.

    தற்போது இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்தது. அதன்படி கோவில் வளாகத்தில் பாலாலயம் மற்றும் பூமி பூஜைகள் நடந்தது. இதில் பட்டர்களின் வேத மந்திரங்கள், மேளதாளங்கள் இசை முழங்க யாகசாலையில் பூஜைகள் நடந்தது.

    தொடர்ந்துமூலவர் மாரியம்ம–னுக்கு அபிஷே கங்கள், தீபாராதனைகள், வண்ணப்பூ அலங்கார பூஜைகள் நடந்தது. பின்னர் கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் தொடங்கியது.

    இதில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டிஅம்பலம், நத்தம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன், பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா, முன்னாள் பேரூ ராட்சி தலைவர் சிவலிங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், பக்தர்களும் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகளும், திருக்கோவில் பூசாரிகளும் செய்திருந்தனர்.

    ×