search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nanguneri new bride missing"

    நாங்குநேரியில் இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுப்பெண் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள உன்னங்குளத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் முத்துக்கனி(வயது21). இவருக்கும் மானூர் அருகேயுள்ள தெற்கு கரிசல்குளத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இன்று காலை திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து முருகன் திருமண ஏற்பாடுகளை கவனித்து வந்தார். திருமண அழைப்பிதழ் அச்சிடப்பட்டு உறவினர்களுக்கும் வழங்கப்பட்டது. மணமகன் வீட்டிலும் திருமண ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி முருகன் குடும்பத்தினருடன் சங்கரன் கோவிலுக்கு ஜவுளி எடுக்க சென்றார். இந்த வேளையில் வீட்டில் இருந்த முத்துக்கனி வீட்டை பூட்டி சாவியை பக்கத்துவீட்டில் கொடுத்துவிட்டு வெளியில் செல்வதாக கூறி சென்றார்.

    அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. ஜவுளி எடுக்க சென்று வீடு திரும்பிய முருகன் மகளை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து முத்துக்கனியை அக்கம் பக்கத்தில் தேடினார். எனினும் அவர் கிடைக்கவில்லை.

    இதுபற்றி முருகன் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்கனி எங்கு சென்றார்? என்ன ஆனார்? அவரை யாரும் கடத்தி சென்றனரா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ×