என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Namakkal news: Abhiseka Aradhana"

    • 60 அடி உயர முள்ள திருப்பதி முனியப்பசாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓதி யாகவேள்வி பூஜையும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சேளூர் சாணார்பாளையத்தில் சுமார் 60 அடி உயர முள்ள திருப்பதி முனியப்பசாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து மண்டாலபிஷேகத்தை முன்னிட்டு 48 நாட்கள் தினந்தோறும் முனியப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    நேற்று மண்டலாபிஷேக நிறைவு நாள் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு முனியப்பசாமி கோவில் வளாகத்தில் அக்னிகுண்டம் வைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓதி யாகவேள்வி பூஜையும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மகா தீபாராதனையும், பிரசாதம் வழங்குதலும், அன்னதானமும் நடைபெற்றது. விழாவில் சேளூர் சாணார்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு முனியப்பசாமியை வழிபட்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை சேளூர் சாணார்பாளையம் திருப்பதி முனியப்பசாமி கோவில் விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். இந்நிலையில் கோவிலின் பக்தர்கள் அபிஷேகம் நிறைவுற்றதை முன்னிட்டு வெங்கடாஜலபதியை தரிசனம் செய்வதற்காக திருப்பதி சென்றுள்ளனர்.

    மேலும் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் முதல் தேதி அசைவ அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் மாசி மாதம் முதல் தேதி அசைவ அபிஷேகம், அன்னதானமும் வழங்கப்பட உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    ×