search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nam Tamilar Party"

    • நட்டாத்தி ஊராட்சி செயலர் முத்து ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
    • நட்டாத்தியின் தென்புறம் கண்ணான்டி விளை வரை நட்டாத்தி- பட்டாண்டி விளை மெயின் ரோட்டின் ஓரங்களிலும் பனை விதைகள் நடப்பட்டது.

    சாயர்புரம்:

    சாயர்புரம் அருகே உள்ள நட்டாத்தி பஞ்சா யத்துக்கு உட்பட்ட பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் 1,200 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீவைகுண்டம் தொகுதி செயலாளர் ஜேசுராஜ் தலைமை தாங்கினார். ஏரல் நகர செயலாளர் திரவியம், நகர தலைவர் பாஸ்கர், மாவட்ட தலைவர் சுடலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் நட்டாத்தி ஊராட்சி செயலர் முத்து ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நட்டாத்தியின் தென்புறம் கண்ணான்டி விளை வரை நட்டாத்தி- பட்டாண்டி விளை மெயின் ரோட்டின் ஓரங்களிலும் பனை விதைகள் நடப் பட்டது. நிகழ்ச்சியில் ஸ்ரீவை குண்டம் வடக்கு தொகுதி தலைவர் அருண் ஆறுமுகம், தொகுதி பொருளாளர் இஸ்ரவேல், தெற்கு தொகுதி பொறுப் பாளர்கள் ஐகோர்ட் ராஜா, ஐசக், கணேசன். கருங்குளம் ஒன்றிய செயலாளர் சந்தனராஜ், மாவட்ட கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை இணை செயலாளர் பேச்சிராஜா, ஸ்ரீவைகுண்டம் நகர செயலாளர் கோபால், ஒன்றிய செயலாளர்கள் சுடலைக்கண்ணு, சுடலைமுத்து, கருங்குளம் ஒன்றிய துணை தலைவர் சண்முகவேல், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய வீரத்தமிழர் முன்னணி செயலாளர் காசிபாண்டியன், மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சேது, ஸ்ரீவைகுண்டம் மத்திய ஒன்றிய இணை செயலாளர் வாசிம், துணை செயலாளர் ஆறுமுகம், சாயர்புரம் நகர இணை செ யலாளர் ஆரோக்கியமணி, ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய வீரத்தமிழர் முன்னணி செயலாளர் சங்கர், சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் சிவராமமூர்த்தி, ஏரல் நகர இணைச் செயலாளர் ஆத்திராஜ், ஏரல் நகர துணைத்தலைவர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×