என் மலர்
நீங்கள் தேடியது "nalumavadi kurumbur road"
நாசரேத்:
ஆழ்வார்திருநகரி ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் ரஞ்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
நாலுமாவடி-குரும்பூர் சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாகவும் பெரிய பள்ளங்கள் நிறைந்தும் காணப்படுகிறது. இந்த வழியாக செல்லும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் மிகவும் சிரமப்படுகின்றன.
குறிப்பாக வனத்திருப்பதி கோவிலில் நடக்கும் விழாக்களுக்கும் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் நடைபெறும் ஜெபக் கூட்டங்களுக்கும் செல்லும் பஸ்கள் வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களும் கடும் அவதிப்படுகிறார்கள். மேலும் ஆழ்வார்திருநகரி-பேரூர் சாலை, குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
இந்த வழியாக தூத்துக்குடிக்கு வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நாலுமாவடி- குரும்பூர் சாலை மற்றும் ஆழ்வார்திருநகரி-பேரூர் சாலையை விரைவில் சீரமைக்கவேண்டும். சாலையை சீரமைக்க தவறும் பட்சத்தில் ஆழ்வார்திருநகரி ஒன்றிய ம.தி.மு.க. சார்பில் பஸ் மறியல் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு கூறியுள்ளார்.






