search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nallapambu escaped"

    • சூலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார்.
    • மீட்பு படையினரிடம் சிக்காமல் அருகிலுள்ள புதருக்குள் சென்று மறைந்தது.

    சூலூர்

    சூலூர் காங்கேயம் பாளையம் அருகே முருகானந்தம் என்பவர் வெங்காய வியாபாரம் செய்ய கடை வைத்து உள்ளார். இவரது கடையில் உட்கார்ந்து இருந்த போது வினோதமான ஒரு சத்தம் கேட்பதை உணர்ந்தார். அது எங்கிருந்து வருகிறது என்று பார்க்கும் போது அங்கு 10 அடி நீளம் கொண்ட ஒரு நல்ல பாம்பு இருந்தது.

    உடனடியாக இதுபற்றி சூலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு அலுவலர் ரகுநாதன் தலைமையில் அங்கு வந்த தீயணைப்பு படையினர் நல்ல பாம்பை அந்த கடை முழுவதும் தேடினர். ஆனால் அந்த நல்ல பாம்பு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரிடம் சிக்காமல் அருகிலுள்ள புதருக்குள் சென்று மறைந்தது.

    சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு படையினர் நல்ல பாம்பை பிடிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர். மீண்டும் அங்கு பாம்பு தென்பட்டால் தங்கள் அழைக்குமாறு கூறி சென்றனர். இதனால் அக்கடை ஊழியர்கள் கடைக்குள் செல்லவே அச்சமான சூழ்நிலையில் இருந்தனர்.  

    ×