search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nagapattinam distric collector suresh kumar"

    சாலைகளை சேதப்படுத்தும் வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    சீர்காழி:

    நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி ஒன்றியப் பகுதிகளில் ஊரக வளர்சசித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சீர்காழி ஒன்றியம் மருவத்தூரில் ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.35.85 லட்சம் மதிப்பீட்டில் மருவத்தூர் முதல் குமாரநத்தம் வரையில் சாலை அமைக்கும் பணிகளையும், எடக்குடி வடபாதி ஊராட்சியில் ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.26.85 லட்சம் மதிப்பீட்டில் தென்பாதி மேலத்தெரு சாலை அமைக்கும் பணிகளையும், காத்திருப்பு கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.3.70 இரட்டைவாய்க்கால் தூர்வாரும் பணிகளையும், கலெக்டர் பார்வையிட்டார். மேலும் திருவெண்காடு முத்தையா நகரில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு (2017-18) நிதியின்கீழ் ரூ.10.08 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்காடி கட்டிடத்தையும், திருவாலி முதல் நெப்பத்தூர் வரை பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு (2017-18) திட்டத்தின்கீழ் ரூ.133.35 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகளையும் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு பணிகளின் தரத்தினை சோதனை செய்தார்.

    நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதிய தார்சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வயல்களில் உழவு பணிகளுக்காக டிராக்டர்களில் இரும்பு சக்கரத்தினை பொருத்தி சாலைகளின் வழியாக வயல்களுக்கு எடுத்துச்செல்லப்படுவதால் சாலைகள் மிகுந்த சேதத்திற்கு உள்ளாகின்றன. இதனை தவிர்க்கும் வகையில் சாலைகளில் கேஜிவீலை பொருத்தி டிராக்டரை எடுத்துச் செல்வதை அனைவரும் தவிர்க்க வேண்டும். மீறி சாலைகளில் கேஜிவீலை பொருத்தி டிராக்டர்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது நாகை மாவட்ட செயற்பொறியாளர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஞானசெல்வி, ரெஜினா ராணி, பொறியாளர் முத்துகுமார், ஓவர்சியர் சந்திரசேகர், சாலை ஆய்வாளர் சங்கீதா ஆகியோர் உடன் இருந்தனர்.
    ×