என் மலர்
நீங்கள் தேடியது "Nagalam Man temple is situated with Nadkulam."
- பேரணாம்பட்டு அருகே துணிகரம்
- போலீசார் விசாரணை
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு அருகே உள்ள நலங்காநல்லூர் கிராம பகுதியில் வனப்பகுதியை யொட்டி அதே கிராமத்தை சேர்ந்த சுனில் குமார் என்பவ ருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பலநூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் பின்புறம் நாகாலம் மன் கோவில் நடுக்கல்லுடன் அமைந்துள்ளது.
ஆண்டு தோறும் ஆடி மற்றும் புரட் டாசி மாதங்களில் இந்த கோவிலில் கிராம மக்கள் வழிப்பட்டு வருகின்றனர்.
மேலும் இங்கு புதையல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 3 மணியளவில் காரில் வந்த 5 பேர்கொண்ட கும்பல் ஒன்று கடப்பாரை, மண்வெட்டி கொண்டு நாகாலம்மன் கோவிலில் சுமார் 2 அடி பள் ளம் தோண்டி அங்கிருந்த 3நாகாலம்மன் சிலைகளை காரில் கடத்தி சென்றனர்.
இதனை பார்த்த ஆடு மேய்த்து கொண்டிருந்தவர் கள் சென்று கேட்டபோது நிலத்தடி நீர் மட்டம் பார்க்க வந்ததாக கூறி உள்ளனர். ஆனால் கிராம மக்கள் அவர் களைவிரட்டி சென்று பிடிக்க முயன்ற போது மின்னல் வேகத்தில் காரில் தப்பி சென் றனர்.
இது குறித்து பேரணாம் பட்டு போலீஸ் நிலையத்தில் நலங்கா நல்லூர் கிராம மக் கள் புகார் கொடுத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு கிராம மக்களி விசாரணை நடத்தினார்.
மேலும் காரில் சிலைகளை கடத்திய மர்ம கும்பல் யார் என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.






