search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mysterious mobs"

    • திடீரென்று ஒரு கும்பல் சரமாரியாக பஸ்சை நோக்கி கற்களை வீசினார்கள்.
    • குடிபோதையில் இருந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பித்து ஓடினார்கள்.

    கடலூர்:

    கடலூரில் இருந்து நெல்லிக்குப்பம் நோக்கி தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது கடலூர் அடுத்த நத்தப்பட்டு பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென்று ஒரு கும்பல் சரமாரியாக பஸ்சை நோக்கி கற்களை வீசினார்கள். இதில்பின்பக்கம் கண்ணாடி முழுவதும் பலத்த சத்தத்துடன் உடைந்து நொறுங்கியது.

    அப்போது பஸ்சில் இருந்த மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அலறி கத்தி துடித்தனர். இதனை தொடர்ந்து பஸ் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்திய நிலையில், பொதுமக்கள் மர்ம கும்பலை பிடிக்க ஓடினார்கள் . அப்போது குடிபோதையில் இருந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பித்து ஓடினார்கள். இதனை தொடர்ந்து தனியார் பஸ் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×