search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mysteries death"

    • பிரேத பரிசோத னையின் முடிவில் தான் அவர் எவ்வாறு இறந்தார் என தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
    • பிரேத பரிசோத னையின் முடிவில் தான் அவர் எவ்வாறு இறந்தார் என தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    கம்பம்:

    கம்பம் ஜல்லிக்கட்டு தெருவை சேர்ந்தவர் இருளாண்டி. இவர் கம்பம் வாரச்சந்தையில் கோழி வியாபாரம் செய்து வரு கிறார். இவரது மகன் வீரமணி (வயது 25). இவ ருக்கு கடந்த 8 வருடங்க ளுக்கு முன்பு சங்கவி என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு துர்கேஸ்வரன், சக்தீஸ்வ ரன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    நேற்று காலை வீட்டை விட்டு வெளியே சென்ற வீரமணி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இருளாண்டி குடும்பத்தினர் அனைவரும் வீரபாண்டி கோவில் திருவிழாவிற்கு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது வீரமணி மட்டும் இல்லாததால் அவரை பல்வேறு இட ங்களில் தேடிப்பார்த்தனர். அப்போது புதுபஸ் நிலையம் சாலையில் உள்ள டாஸ்மாக் பார் எதிரே மர்மமான முறையில் வீரபாண்டி இறந்து கிடந்தார்.

    அப்பகுதியில் மழை பெய்து ஓய்ந்திருந்த நிலையில் உடல் தண்ணீரில் ஊறி காணப்பட்டது. இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் வீரமணி இறப்பில் சந்தேகம் உள்ளது. அவரை யாரோ அடித்து கொலை செய்து விட்டனர். எனவே உரிய விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்த னர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு ள்ளது. பிரேத பரிசோத னையின் முடிவில் தான் அவர் எவ்வாறு இறந்தார் என தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    ×