என் மலர்
நீங்கள் தேடியது "Muslims perform special prayers in mosques"
- ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்
- கோட்டைக்கு செல்ல அனுமதி மறுப்பு
வேலூர்:
இஸ்லாமியர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் பக்ரீத் பண்டிகையும் ஒன்று. ஈகைத்திருநாள் எனப்படும் இந்த பண்டிகை நாளில் அசைவ உணவுகளை சமைத்து பலருக்கும் பகிர்ந்து அளித்து உண்டு மகிழ்வார்கள்.
வேலூரிலும் அனைத்து மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். குழந்தைகள் புத்தாடைகள் அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
வேலூர் கஸ்பா, ஆர்.என் பாளையம், சின்ன அல்லாபுரம், தொரப்பாடி, சத்துவாச்சாரி, காட்பாடி எம்ஜிஆர் நகர், சைதாப்பேட்டை, மக்கான், ஆற்காடு சாலை, முள்ளிப் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மசூதிகளில் இஸ்லாமியர்கள் காலை முதல் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர், ராணிப்பேட்ைட
அதேபோல, ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு, ராணிப்பேட்டை, மேல்விஷாரம், கீழ்விஷாரம், வாலாஜா, அரக்கோணம், சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில், ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர், உமராபாத், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் பகுதிகளில் உள்ள பெரிய மசூதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
வசதியில்லாத ஏழை இஸ்லாமியர்கள் மற்றும் கரோனாவால் வாழ்வா தாரத்தை இழந்த இஸ்லாமியர் களுக்கு, வசதி படைத்த இஸ்லா மியர்கள் இறைச்சி வகைகளை வழங்கி பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள 15 மசூதி களில் சிறப்பு தொழுகை நடந்தது. ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டவர்கள் வீடுகளில் ஆடுகளை பலியிட்டு குர்பானி கொடுத்தனர்.
அதேபோல், சேத்துப்பட்டு பழம்பேட்டையில் உள்ள பெரிய பள்ளிவாசல், சிறிய பள்ளிவாசல், ஈத்கா மைதானம் உட்பட இடங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.
பின்னர், ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன் ஏழை, எளிய மக்களுக்கு குர்பானி கொடுத்தனர். இதேபோல், மாவட்டம் முழுவதும் நேற்று பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வேலூர் கோட்டை வளாகத்தில் மசூதியில் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. காந்தி சிலையின் அருகே கோட்டைக்கு செல்லும் இருபுறமும் இரும்பு கம்பிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டன.
அதிகாலையில் நடைபயிற்சிக்கு வந்தவர்கள் கோட்டைக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. எனவே அவர்கள் வெளியே உள்ள பூங்காவில் நடை பயிற்சி மேற்கொண்டனர்.
மேலும் கோட்டையை சுற்றிப்பார்க்க வந்தவர்க ளையும், ஜலகண்டே ஸ்வரர் கோவிலுக்கு வந்தவர்களையும் போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்






