search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "multi-purpose center"

    • பல் நோக்கு மைய கட்டிடத்தை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
    • முதல்-அமைச்சரின் அறிவுரைப்படி ஏற்பாடு

    ஊட்டி

    குன்னூா் ஊராட்சி இளித்தொரை கிராமத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பல்நோக்கு மைய கட்டிடத்தை வனத் துறை அமைச்சா் ராமச்சந்திரன் திறந்துவைத்தாா்.மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். இதில் வனத் துறை அமைச்சா் ராமச்சந்திரன் பேசியதாவது:-

    தமிழகத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    நகா்ப்புற ங்களின் வளா்ச்சிக்கு ஈடாக கிராமப்புறங்களிலும் வளா்ச்சிப் பணிகள் மேம்பட வேண்டும் என்ற தமிழக முதல்-அமைச்சரின் அறிவுறுத்தி உள்ளார்.

    அதற்கேற்ப இளித்தொ ரை கிராம மக்களின் அனைத்துத் தேவைகளையும் பூா்த்தி செய்யும் விதமாக சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இந்த பல்நோக்கு மைய கட்டிடம் பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் குன்னூா் சப்- கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயராமன், குன்னூா் ஊராட்சி ஒன்றிய தலைவா் சுனிதா நேரு, எடப்பள்ளி ஊராட்சி தலைவா் முருகன், குன்னூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெய்சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். 

    ×