search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mulla Peiryar Dam"

    • வைகை அணை நீர்மட்டம் 65.16 அடியாக உள்ளது. வரத்து 1796 கன அடி. திறப்பு 669 கன அடி.
    • மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55.80 அடி. வரத்து 138 கன அடி. திறப்பு 90 கன அடி.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதியிலும் கடந்த மாதம் பரவலாக கனமழை பெய்தது. இதனால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்த நிலையில் கடந்த மாதம் 24-ந்தேதி அணை நீர்மட்டம் 136 அடியை எட்டியது. இதனையடுத்து முதல் கட்ட எச்சரிக்கை இடுக்கி மாவட்டத்துக்கு விடப்பட்டது.

    அதன் பிறகு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்யவில்லை மேலும் அணையில் இருந்து கூடுதலாக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் வரை அணையில் இருந்து 1500 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

    இந்நிலையில் முல்லைப்பெரியாற்றில் வாலிபர் ஒருவர் தவறி விழுந்ததால் அவரை தேடுவதற்காக சனிக்கிழமை இரவு முதல் அணையில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 511 கன அடியாக குறைக்கப்பட்டது.

    இதனால் அணையின் நீர் மட்டம் மீண்டும் 136 அடியை எட்டியுள்ளது. இன்று காலை நிலரப்படி அணையின் நீர் மட்டம் 136.20 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1846 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 6168 மி.கன அடியாக உள்ளது.

    இந்த ஆண்டு 2-வது முறையாக அணையின் நீர் மட்டம் 136 அடியை எட்டியுள்ளதால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டிபெரியாறு, வல்லக்கடவு, சப்பாத்து ஆகிய பகுதிகளுக்கு முதல் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    நீர் பிடிப்பு பகுதியில் மழை இல்லாத நிலையில் செயற்கையாக 136 அடிக்கு நீர் மட்டத்தை உயர்த்தி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள செயலுக்கு 5 மாவட்ட விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    வைகை அணை நீர்மட்டம் 65.16 அடியாக உள்ளது. வரத்து 1796 கன அடி. திறப்பு 669 கன அடி. இருப்பு 4666 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55.80 அடி. வரத்து 138 கன அடி. திறப்பு 90 கன அடி. இருப்பு 451.75 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.54 அடி. வரத்து மற்றும் திறப்பு 127 கன அடி. இருப்பு 100 மி.கன அடி.

    ×