search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mu Ra Sathya"

    எம்.சத்யமூர்த்தி இயக்கத்தில் மு.ரா.சத்யா - மானசா நாயர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `என்னோடு நீ இருந்தால்' படத்தின் விமர்சனம். #EnnoduNeeIrundhal
    வெளியூர் வரும் நாயகன் மு.ரா.சத்யா தனது நண்பன் பிளாக் பாண்டியுடன் தங்குகிறார். இவர்கள் இரண்டு பேரும் ரியல் எஸ்டேட் நிறுவனதத்தில் பணிபுரிந்து வருகின்றனர். பெங்களூரைச் சேர்ந்த நாயகி மானசா நாயர் சென்னை வரும் போது, நண்பர்கள் மூலமாக சத்யா - மானசா நாயர் சந்திப்பு நடக்கிறது. 

    பின்னர் இருவருக்கும் பழக்கம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் மானசாவை ஒருபக்கமாக காதலிக்க ஆரம்பிக்கிறார் சத்யா. இந்த நிலையில், மானசாவுக்கு திருமணம் நடக்கப் போவதாக செய்தி கேட்டு அதிர்ச்சியாகிறார். நாட்டில் நடக்கும் தவறுகளின் பட்டியலை சேகரித்து வைக்கும் சத்யா, தவறு செய்பவர்களுக்கு கடுமையான தணடனை கொடுக்க வேண்டும் என்று மனநிலை உடையவர். 

    இப்படி இருக்க மானாசாவின் திருமணம் நின்றுவிடுகிறது. மானசாவுக்கு பார்த்த மாப்பிள்ளை தப்பானவர் என்ற தகவல் கிடைக்கிறது. இதையடுத்து மானசாவை சந்திக்க ஆசைப்படும் சத்யாவுக்கு மானசாவின் போன் கிடைக்கிறது. அதில் பேசும் மானசா, குறிப்பிட்ட நபர்களை சுட்டிக்காட்டி அவர்கள் தவறு செய்துள்ளதாகக் கூறி அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொல்கிறாள். 



    இதையடுத்து சத்யா அவர்களை தேடிக் கண்டுபிடித்து கொள்கிறார். செய்திகளில் வரும் தவறுகள் உட்பட தவறு எங்கு நடந்தாலும் அதற்கு காரணமானவர்களை கொலை செய்கிறார். இந்த நிலையில், சத்யாவுக்கு விபத்து ஏற்பட அவரை மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். அங்கு அவரை சோதனை செய்து பார்த்ததில் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டது தெரிகிறது. 

    கடைசியில், சத்யா சரியான மனநிலைக்கு வந்தாரா? தெரிந்து தான் கொலை செய்தாரா? நாயகியை கரம்பிடித்தாரா? அல்லது அவரது கொலை வேட்டை தொடர்ந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகன் சத்யா, மானசா நாயர், பிளாக் பாண்டி, வெண்ணிற ஆடை மூர்த்தி என அனைத்து கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். 



    தவறு செய்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி படத்தை இயக்கியிருக்கிறார் எம்.சத்யமூர்த்தி. படத்தின் கதைக்கு ஏற்ப திரைக்கதை விறுவிறுப்பு குறைவாக உள்ளது. படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம். 

    கே.கே. இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். மணி ஒளிப்பதிவில் காட்சிகளும் சுமாராக வந்துள்ளன. 

    மொத்தத்தில் `என்னோடு நீ இருந்தால்' கற்பனை. #EnnoduNeeIrundhal

    ×