என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "mrs world"
- இந்தியா சார்பில், சர்கம் கவுசல் என்ற 32 வயது பெண், கலந்து கொண்டார்.
- சர்கம் கவுசல், காஷ்மீரின் ஜம்முவை பூர்வீகமாக கொண்டவர்.
வாஷிங்டன் :
திருமணமான பெண்களில் சிறந்த அழகியை தேர்ந்தெடுப்பதற்காக, 'திருமதி உலக அழகி' (மிஸஸ் வேர்ல்டு) என்ற போட்டி, கடந்த 1984-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான இப்போட்டி, அமெரிக்காவில் வெஸ்ட்கேட் லாஸ் வேகாஸ் ரிசார்ட் என்னும் சொகுசு விடுதியில் நடந்தது. 63 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர்.
இந்தியா சார்பில், சர்கம் கவுசல் என்ற 32 வயது பெண், கலந்து கொண்டார். நேற்று இறுதிச்சுற்று போட்டி நடந்தது.
அதில், சர்கம் கவுசல் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினார். அவருக்கு சென்ற ஆண்டுக்கான திருமதி உலக அழகி ஷாலின் போர்டு, கிரீடம் சூட்டினார். அப்போது, அரங்கம் அதிர கைதட்டல் எழுந்தது.
2-வது இடத்தை பாலினேசியா நாட்டு பெண்ணும், 3-வது இடத்தை கனடா அழகியும் பிடித்தனர்.
கடந்த 2001-ம் ஆண்டு திருமதி உலக அழகி பட்டத்தை இந்திய பெண் அதிதி கவுரிகர் வென்றார். 21 ஆண்டுகள் கழித்து, இந்த பட்டம் மீண்டும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
தான் வெற்றி பெற்றதை சர்கம் கவுசல் சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் அறிவித்தார். ''21 ஆண்டுகளுக்கு பிறகு நமக்கு கிரீடம் கிடைத்துள்ளது. எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்தியாவை நேசிக்கிறேன். உலகத்தை நேசிக்கிறேன்'' என்று அவர் கூறியுள்ளார்.
2001-ம் ஆண்டில் திருமதி உலக அழகி போட்டியில் வென்ற அதிதி கவுரிகரும் சர்கம் கவுசலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சர்கம் கவுசல், காஷ்மீரின் ஜம்முவை பூர்வீகமாக கொண்டவர். அவருடைய கணவர் அடி கவுசல், இந்திய கடற்படை அதிகாரி ஆவார். இவர்களுக்கு 2018-ம் ஆண்டு திருமணம் ஆனது.
கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ மகேஷ் (வயது 49). இவர் உடற்பயிற்சி சிகிச்சை நிபுணராக உள்ளார். இவருடைய கணவர் மகேஷ்குமார் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
அமெரிக்காவில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான திருமதி உலக அழகி போட்டி நடைபெற்றது. பல்வேறு நாடுகளை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் வெற்றி பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சிறு வயது முதலே சாதிக்க வேண்டும் என்று நினைத்து கடுமையாக உழைத்தேன். அதற்கான பலன் தற்போது கிடைத்து உள்ளது.
இந்தியாவில் ஆரம்ப காலத்தில் கூட்டு குடும்பங்கள் அதிகமாக இருந்தன. இதனால் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் தங்களது அனுபவத்தின் மூலம் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினர்.
தனிக்குடும்ப முறை காரணமாக பெற்றோர்களால் தங்களது பிள்ளைகளை சரிவர கண்காணிக்க முடியாமல் போய் விடுகிறது. தற்போது கணவன், மனைவி இருவரும் பணிக்கு செல்கின்றனர். இதனால் குழந்தைகள் தனிமையில் இருக்கின்றனர். இந்த தனிமையை சில நபர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு பெண் குழந்தைகளிடம் அத்துமீறுகின்றனர். கூட்டுகுடும்ப முறை குறைந்து வருவதே இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்க காரணம்.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் என்ன செய்கின்றனர், யாருடன் பழகுகின்றனர், அவர்களின் நட்பு வட்டாரத்தில் யார் உள்ளனர் என்று கண்காணிக்க வேண்டும். இளம்பெண்களும் தாங்கள் செல்லும் இடங்கள், யாருடன் செல்கிறோம் என்பது குறித்த விபரங்கள், பயணம் செய்யும் வாகனங்களின் பதிவு எண், டிரைவர் விபரம் போன்றவற்றை தங்களது பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் பாலியல் குற்றங்களை குறைக்க முடியும்.
தாய்-மகள் உறவு என்பது நல்ல தோழிகள் போல் இருக்க வேண்டும். பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக போராட வேண்டும். இதுதவிர இளம் வயதினரிடையே பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்