என் மலர்
நீங்கள் தேடியது "mother for Mother Nature"
- நண்பன் அறகட்டளையின் மதர் ஃபார் மதர் நேச்சர் தனது சமூகப்பணியாற்றி வருகிறது.
- இந்த நீர் மேலாண்மை துவக்க விழாவில் தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நண்பன் அறகட்டளையின் மதர் ஃபார் மதர் நேச்சர் (mother for Mother Nature) இயற்கை விவசாயம் , மகளிர் மேம்பாடு மற்றும் விளையாட்டுத்துறை என்று பல்வேறு துறையில் தனது சமூகப்பணியாற்றி வருகிறது. தற்போது இந்த நண்பன் mothers for mother Nature, நீர் மேலாண்மை திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குளம், நாச்சான் குளம், வருசாக்குளம் ஆகிய ஊர்களின் நீர்பாசன குளங்கள், மற்றும் வாய்க்கால்களை தூர்வாரி ஆழப்படுத்தும் வேலையை அமெரிக்க தமிழரான நண்பன் குழுமத்தின் நிறுவனர்களான ஜிகே, மணி மற்றும் சக்திவேல் (USA)ஆகியோர் தலைமை ஏற்று நடத்துகிறார்கள். இவர்களுடன் பிரீத்தா (USA) இணைந்து நண்பன் எம்எஃப்எம்என்-யை வழிநடத்தி செல்கின்றார்.

இவர்களுடன் காவேரி டெல்டா பகுதியை சார்ந்த நண்பன் நிமல் ராகவன், தங்ககண்ணன், சித்தார்த் ஆகியோரும் கைகோர்த்துள்ளனர். இந்த நீர் மேலாண்மை திட்டத்தில் சுமார் 410 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்தை தூர்வருவதன் முலம் 600 கோடி லிட்டர் தண்ணியை சேமிக்க முடியும். இதனால் சுமார் 12,000 விவசாய பெருங்குடி மக்கள் பயன்பெறுவர். மேலும் இந்த குளத்தை தூர்வருவதன் முலம் இந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, நீர் 40 முதல் 100 அடிக்குள் கிடைக்க வாய்ப்பு ஏற்ப்படும் என்கின்றனர் இந்த அறக்கட்டளை குழுவினர்.
இந்தப் பணியை செய்து முடிக்க இரண்டு மாதம் கால அவகாசம் ஆகும் எனவும் இந்த பணிக்காக புத்தம்புதியதாக ₹37.50 லட்சம் மதிப்புள்ள பொக்லைன் எந்திரத்தை நண்பன் MFMN மக்கள் பயண்பாட்டுக்காக வழங்கியுள்ளது. இந்த 410 ஏக்கர் பரப்பளவுள்ள குளங்களை தூர்வார ஆகும் எரிபொருள் செலவான ₹3 முதல் ₹4 லட்சத்தையும் நண்பன் அறங்கடளை ஏற்க்கும் என்றும் தெரிவித்தனர்.

இந்த நீர் மேலாண்மை துவக்க விழாவில் தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நண்பன் என்பது எவ்வித பிறதி பலனும் எதிர்பார்க்காமல் உதவி செய்வதே, அதேபோல் இந்த நண்பன் அறக்கட்டளையின் வெளிநாடு வாழ் தமிழர்கள் எந்த பலனும் எதிர்பார்க்காமல் இந்த ₹37.5லட்சம் மதிப்புள்ள புத்தம்புதிய பொக்லைன் எந்திரம் வழங்கி நீர் மேலாண்மைக்கு உதவுகிறார்கள். நீரின் தேவை அறிந்து இவர்கள் செய்யும் உதவி மிகப்பெரியது. இந்த அறக்கட்டளை மேலும் வளர வேண்டும், இவர்கள் சமூகப் பணி தொடர வேண்டும். குழந்தைக்கு எப்படி தாய்ப்பால் முக்கியமோ அதே போல் மனித குலத்திற்கு நீரின் தேவை முக்கியம், அதை பாதுகாக்க வேண்டியது மற்றும் சுகாதாரமாக வைத்துக் கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என்றார்.






