search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Morning Dippan Recipe"

    • எல்லோரும் தினமும், இட்லி, தோசை, பொங்கல் தான் சாப்பிட்டு இருப்போம்.
    • கடலைப்பருப்பு, முட்டையை வைத்து எப்படி அடை தோசை?

    பெரும்பாலும் காலை உணவுக்கு இட்லி, தோசை தான் எல்லாரும் சாப்பிட்டு இருப்போம். ஆனால் எப்பொழுதும் போல வெறும் தோசை மட்டும் செய்து சாப்பிடுவதற்கு பதிலாக கடலைப்பருப்பு, முட்டையை வைத்து எப்படி அடை தோசை செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

    தேவையான பொருட்கள்:

    கடலைப்பருப்பு- 100 கிராம்

    பொட்டுக்கடலை- ஒரு கைபுடி

    முட்டை- 5

    வெங்காயம்- 2

    பச்சை மிளகாய்- 2

    பச்சை அரிசி- 200 கிராம்

    உப்பு- தேவையான அளவு

    மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்

    செய்முறை:

    முதலில் கடலைப்பருப்பு மற்றும் பச்சரிசியை 6 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். ஊற வைத்த கடலை பருப்பு மற்றும் அரிசியுடன், பொட்டுக்கடலை சேர்த்து நன்றாக கொர கொரப்ப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

    அரைத்து வைத்துள்ள கடலைப்பருப்பு மற்றும் பச்சரிசி கலவையுடன் வெங்காயம், பச்சைமிளகாய், முட்டை, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    இப்போது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும், தோசை மாவு கலவையை ஊற்றி இருபுறமும் வேக வைத்து சுட்டு எடுக்கவும். அவ்வளவு தான் அட்டகாசமான முட்டை அடை தோசை தயார். இதனை கார சட்னியுடன் சாப்பிட்டால் அட்டகாசமான சுவையில் இருக்கும். நிச்சயம் ஒருமுறை செய்து பாருங்கள். வேண்டுமென்றால் கொத்தமல்லித் தழை அல்லது வெங்காயத்தாள் தூவியும் தோசை வார்க்கலாம். சுவை அட்டகாசமாக இருக்கும்.

    • கோதுமையில் பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
    • கோதுமை மாவிலும் இடியாப்பம் தயாரிக்கலாம்.

    அரிசியை காட்டிலும் கோதுமையில் பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. புரோட்டீன் உள்ளிட்ட அத்தியாவசிய சத்துகள் இதில் உள்ளன. இடியாப்பம் என்றாலே நாம் பெரும்பாலும் அரிசிமாவில்தான் தயாரிப்போம். நாம் கோதுமை மாவிலும் இடியாப்பம் தயாரிக்கலாம். இது அனைத்து வயதினருக்கும் மிகவும் ஏற்றதாக இருக்கும். வாங்க கோதுமை இடியாப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு - ஒரு கப்

    தண்ணீர் - ஒரு கப்

    தேங்காய் எண்ணெய் - ஒரு ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, கடாய் லேசாக சூடானதும் கோதுமை மாவை சேர்த்து, லேசான தீயில் வாசம் வரும் வரை வறுக்க வேண்டும். (மாவு தீய்ந்து விடாமல் பக்குவமாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்) வறுத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து விட வேண்டும்.

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் சேர்த்து, அதில் தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். இவை அனைத்தும் நன்றாக கொதித்த பிறகு இந்த தண்ணீரை எடுத்து நாம் வறுத்து வைத்திருக்கும் கோதுமை மாவில் சிறிது சிறிதாக சேர்த்து கரண்டியைக் கொண்டு மாவை நன்றாக கிளறி விட வேண்டும்.

    சிறிது சூடு ஆறியதும் மாவை, கைகளால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளலாம். பிசைந்த மாவை 5 முதல் 10 நிடங்கள் மூடி போட்டு அப்படியே ஊற வைக்க வேண்டும்.

    இப்பொழுது இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து மூடி வைத்து விட வேண்டும். இடியாப்பம் அல்லது இட்லி தட்டில் எண்ணெய் தடவி, பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து தேவையான அளவு உருண்டையாக உருட்டி இடியாப்பம் பிழியும் கட்டைக்குள் சேர்த்து இடியாப்ப தட்டில் பிழிந்துவிட வேண்டும்.

    இட்லி சட்டியில் தண்ணீர் கொதித்த பின், பிழிந்து வைத்திருக்கும் இடியாப்பத்தை அதற்குள் எடுத்து வைத்து மூடி போட்டு குறைவான தீயில் ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும். வறுத்த மாவை சுடு தண்ணீரில் பிசைந்துள்ளதால், இடியாப்பம் விரைவிலேயே வெந்து விடும்.

    இந்த இடியாப்பம் தேங்காய் பால் மற்றும் குருமாவுடன் வைத்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

    ×