search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Morning break fast scheme"

    • மதுரையில் 15-ந் தேதி முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடங்கப்பட்டது.
    • தேனி மாவட்டத்தில் 2633 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்

    தேனி:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் 15-ந் தேதி முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து நேற்று தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றியம், ஆத்தாங்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இராஜேந்திரா நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்டத்தினை மாணவ- மாணவிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்து அவர்களுடன் உணவு அருந்தினார்.

    அப்போது கலெக்டர் தெரிவித்ததாவது:-

    சத்துணவுத் திட்டம் குழந்தைகளைத் தவறாமல் பள்ளிக்குச் செல்லத் தூண்டுவது மட்டுமல்லாமல் வகுப்பறையில் பசியின்றிப் படிக்கவும் உதவுகிறது. மேலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தினை உறுதிப்படுத்தி, கற்றல் ஆர்வத்தினை அதிக்கப்படுத்துகிறது. ஒவ்வொரு நாளும் சத்தாண உணவினை வழங்குவது குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டினை நிவர்த்தி செய்து அதன் மூலம் மனித வளர்ச்சியை மேம்படுத்திடும் வகையில் சத்துணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதனைத் தொடர்ந்து "கல்வி என்பது ஒருவருடைய மனதினைத்திறவுகோல், ஊட்டச்சத்துடன் கூடிய கல்வி என்பது குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அடித்தளமாகிறது" என்பதனை கருத்தில் கொண்டு அரசுப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-வகுப்பு வரை பயிலுகின்ற ஏழை மாணவ-மாணவிகளின் கல்வியினை ஊக்கப்படுத்திடவும் ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கிடவும் கற்றல் இடைநிற்றலைத் தவிர்த்திடும் பொருட்டு, முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் புரட்சிகரமான திட்டமாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    அதனடிப்படையில் தேனி மாவட்டத்திற்குட்பட்ட க.மயிலாடும்பாறை வட்டாரத்தில் செயல்பட்டு வரும் 51 அரசு ஆரம்பப்பள்ளிகளில் பயிலுகின்ற 1,342 மாணவர்களுக்கும், 1,291 மாணவிகளுக்கும் என மொத்தம் 2,633 மாணவ-மாணவியகளுக்கு வழங்கப்படவுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, திங்கள் கிழமை ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், செவ்வாய் கிழமை சேமியா காய்கறி கிச்சடி மற்றும் சாம்பார், புதன் கிழமை வெண்பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை அரிசி உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை கோதுமை ரவா கிச்சடி சாம்பார் மற்றும் ரவா கேசரி வழங்கப்படவுள்ளது. இதுபோன்று அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை கொண்டு, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நல்லமுறையில் கல்வி கற்கச் செய்திட வேண்டும் என தெரிவித்தார்.

    ×