என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "More than 200 people from the villages attended and benefited."

    • வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
    • 200-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த அம்மனூர் ஆதிதிராவிட நல உயர்நிலைப்பள்ளியில் மாபெரும் கண்சிகிச்சை ரத்ததான மற்றும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

    அரக்கோணம் அடுத்த அம்மனூர் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் சிஎஸ்ஐ தூய பேதுரு ஆலயம், ஆண்கள் ஐக்கிய சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை, மற்றும் சென்னை அரசு பொது மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் கண்சிகிச்சை ரத்ததான முகாம் மற்றும் வேலைவாய்ப்பு முகாமை பேராயர் கிதியோன் தினகரன் தொடங்கி வைத்தார்.

    இந்த கண் சிகிச்சை முகாம் மூலம் அம்மனூர், மேல்பாக்கம், பருத்திப் புத்தூர், நாகவேடு சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் அஸ்வினி சுதாகர், பிளாரன்ஸ், ஆகியோர் உடன் இருந்தனர்

    ×